Snake Bite: பாம்பு கடியில் விஷம் பரவாமல் இருக்க செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்!

பழைய திரைப்படங்களில், பாம்பு கடித்தால், கடித்த இடத்தில், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சி துப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வாறு செய்பவருக்கு மரணம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே பாம்பு கடித்தால் செய்யக் கூடியது என்ன செய்யக் கூடாதது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

விஷப் பாம்பு கடித்தால்  நொடிப்பொழுதில் மரணம் ஏற்படலாம். எனவே, பாம்பு கடித்தால், ஒவ்வொரு நிமிடத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, உடலில் விஷம் பரவாமல் தடுக்க முயற்சிப்பது மிகவும் முக்கியம். பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

2 /5

திரைப்படங்களில் காட்டுவது போல் வாயிலிருந்து விஷத்தை அகற்ற முயற்சித்தால், விஷம் உங்கள் வாய் வழியாகவும் உடலுக்கு பரவும். மேலும், பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் தடவவும் முயற்சிக்கக் கூடாது.

3 /5

பாதிக்கப்பட்ட பகுதியை சோப்புடன் நன்கு கழுவவும். இதற்குப் பிறகு, பாம்பு கடியின் மேல் கட்டு போடவும். ஆனால், கட்டு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 /5

கட்டு போட்ட பிறகு, கூடிய விரைவில் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கவும். எனவே மருத்துவமனைக்குச் சென்றால் விஷ முறிவு மருந்தை பெறலாம். உங்களுக்கு சரியான உதவி கிடைக்கும் வரை, பீதி அடைய வேண்டாம், பதற்றம் அடைந்தால் உங்கள் இரத்த ஓட்டத்தில் விஷம் வேகமாக பரவும்.

5 /5

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாம்பை அடையாளம் காண, அது எப்படி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். இது உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கு அது விஷப் பாம்பா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும்.