சனி பரிவர்த்தனை: இந்த ராசிக்காரர்கள் ஆஹா..ஓஹோன்னு இருப்பாங்க

புதுடெல்லி: ஜோதிடத்தின்படி, சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் கருணை காட்டினால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பார்கள். சனி பகவானின் ராசி மாற்றம் சில ராசிகளில் நல்ல பலன் தரும். மறுபுறம், சனியின் அருள் சில ராசிகாரர்களுக்கு தீங்கு பயக்குக்கூடும். இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனி தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. சனி தற்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரேசிக்க உள்ளார். எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி 2022 இல் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1 /3

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு சனியின் (Sani Peyarchi) ராசி மாற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. நிர்வாகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக அமையும். இது தவிர, சட்டம், எரிபொருள் துறையில் பணிபுரிபவர்களுக்கு சனிபகவானின் அருள் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். இதனுடன், வேலை செய்பவர்களில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் பெரும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

2 /3

ரிஷபம்: புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கப் போகிறது. சனி கும்ப ராசியில் நுழையும் போதே நிதி நிலை மேம்படும். இது தவிர, வேலை-வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் கவலைகள் நீங்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும்.

3 /3

தனுசு: புத்தாண்டில் தனுசு ராசியின் தலைவிதி மாறப் போகிறது. பணம் வரவில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு தினசரி வருமானம் அதிகரிக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஏப்ரல் 29க்கு பிறகு சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பணம் மற்றும் லாபம் ஒரு வலுவான வாய்ப்பு இருக்கும்.