குரோதி நவராத்திரி எப்போது தொடங்குகிற்து? அன்னை துர்க்கைக்கு ஆயுதங்கள் கிடைத்த கதை!

Golu Vazhipadu In Purattasi : ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை அடுத்த நாள் முதல் நவராத்திரி பண்டிகை அனுசரிக்கப்படுறது

நவராத்திரியில் அன்னை துர்க்கை மற்றும் அனைத்து தெய்வங்களையும் கொலு வைத்து வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பிரபலமானது

1 /9

புராணங்களின் படி சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் மக்களை வதைத்தனர் அரக்கர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள் முத்தேவர்களிடம் முறையிட்டனர்    

2 /9

அரக்கர்களை அழிக்க ஆலோசித்த முத்தேவர்களும், எந்த ஆணாலும் சும்ப நிசும்பர்களை வெல்ல முடியாது என்ற வரம் பெற்ற அசுரர்களை அழிக்க பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

3 /9

மக்களின் துன்பம் கண்டு சகியாத சக்தி அன்னை மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலையானார்கள்.   

4 /9

முத்தேவர்களின் சக்தியைப் பெற்ற அன்னை ஆதிசக்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரின் ஆயுதங்களையும் பெற்றார்.  

5 /9

ஆண் தெய்வங்கள் எல்லாம் சக்தியை, அன்னையிடம் அளித்துவிட்டு, சிலையாய் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. 

6 /9

அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்ட அன்னை பராசக்த்தி சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்தார்

7 /9

ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்ததால் தான் அந்த 9 நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது  

8 /9

ஒன்பது நாள் போருக்கு பிறகு அன்னை வெற்றி பெற்ற தினம் விஜயதசமி நாள் ஆகும்

9 /9

பொறுப்புத் துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது