அதிசயங்கள் நிறைந்த தேவியின் ‘5’ சக்திபீடங்கள்..!!

இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேவியின் பல சக்திபீடங்கள் உள்ளன. இந்தியாவைத் தவிர, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் சக்திபீடங்கள் உள்ளன. இந்த சக்திபீடங்கள் தேவி பகவத் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 52 சக்தி பீடங்களில் தேவியின் இந்த அதிசயமான  5 சக்திபீடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1 /5

அம்பாஜி மாதா கோயில் குஜராத்தில் அரசூர் மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் சிலை இல்லை. ஆனால் அம்மனின் யந்திரம் வழிபடப்படுகிறது. இந்த சக்திபீடத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தேவியின் இதயம் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.

2 /5

மாதாவின் இந்த சக்திபீடம் ஜலந்தர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் 52 சக்திபீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. தேவியின் இடது மார்பகம் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்த அம்மன் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள குளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

3 /5

மாதாவின் இந்த சக்திபீடம் நேபாளத்தில் அமைந்துள்ளது. அன்னை சதியின் உடலின் இரண்டு முழங்கால்களும் இங்கு விழுந்ததாக கூறப்படுகிறது. அதனால் 52 சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிலர் இந்த சக்திபீடத்தை குஹ்யேஸ்வரி கோயில் என்றும் அழைக்கின்றனர்.

4 /5

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோயில் உள்ளது. இதுவும் 52 சக்திபீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தேவியின் தலை இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.  

5 /5

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் என்ற இடத்தில் தேவியின் சக்திபீடம் அமைந்துள்ளது. இது அன்னை காளியின் சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில்  தேவியின் வலது பாதத்தின் நான்கு விரல்கள் விழுந்தன. காளிகாட்டில் உள்ள அன்னை காளியின் சிலையில் அவரது நெற்றியும் நான்கு கைகளும் காணப்படுகின்றன. சிவப்பு துணியால் மூடப்பட்டிருக்கும் சிலையில் அன்னை காளியின் நாக்கு மிக நீளமாக, தங்கத்தால் ஆனது.