இந்தியா தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் கலக்கப்போகும் வீரர்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

KL ராகுல் தலைமையில் 18 பேர் கொண்ட அணிக்கு ரிஷப் பந்த்  துணை கேப்டனாக இருப்பார்.  

1 /5

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில், 3/17 எடுத்து, பொறுமையாக 34 ரன்கள் எடுத்து தனது விமர்சகர்களுக்குப் பொருத்தமான பதிலை அளித்தார் ஹர்திக் பாண்டியா.

2 /5

ஐபிஎல் 2022ல் எலிமினேட்டரில் இருந்து வெளியேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாட்டின்போது கே.எல்.ராகுலின் தலைமையும் அவரது பேட்டிங்கும் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

3 /5

ஐபிஎல் 2022ல் பலரின் கவனத்தையும் கவர்ந்தார் அர்ஷ்தீப் சிங். 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர்களை அடிப்பதிலும் குறிவைக்கும் திறனிலும் திறமையைக் காட்டினார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்

4 /5

ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஸ்பெஷலிஸ்ட் ஃபினிஷராக விளையாடினார் தினேஷ் கார்த்திக். அபாரமான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரில்  வெளிப்படுத்தினார் தினேஷ் கார்த்திக்.

5 /5

ஜம்முவைச் சேர்ந்த உம்ரான் மாலிக், அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கினார். ஒவ்வொரு போட்டியிலும் 150 கிமீ வேகத்தில் விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக்.