வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா... 

நம்மில் பலருக்கு டீயுடன் நாளை தொடங்கும் பழக்கம் உள்ளது. காலையில் எழுந்ததும் நம்மைப் புத்துணர்ச்சியடையச் செய்யும் டீயை நாம் பொதுவாக பெட் டீ என்று அழைக்கிறோம். ஆனால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

1 /5

உயர் இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பெட் டீ குடிக்கக் கூடாது. ஏனெனில் இதில் உள்ள காஃபின் உடலில் கரைந்தவுடன் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

2 /5

டென்ஷன்: பொதுவாக சிலர் டென்ஷன் அதிகமாக இருக்கும் போது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், அவ்வாறு செய்வது மன அழுத்தத்தை மிகவும் அதிகரிக்கும். உண்மையில், தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது, இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.  

3 /5

செரிமானம்: காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது வயிற்றில் வாயு பிரச்சனைகளை உண்டாக்கி செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது.

4 /5

சர்க்கரை நோய் அபாயம்: காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரையுடன் டீ குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அதன் மூலம் உடலின் பல செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இது  நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.  

5 /5

அல்சர்: காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால், இந்த பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள், அப்படி செய்தால் வயிற்றின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டு அல்சருக்கு வழிவகுக்கும்.  ( பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது)