Coronavirus: என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது; WHO கூறுவது என்ன

கொரோனாவின் இரண்டாவது அலையில், உங்களை தொற்றுநோயை பாதிக்ககாமல் பாதுகாக்க, நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

சத்தான ஆரோக்கியமான உணவை உண்ணும் மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், அவர்களின் நோய் எதிர்ப்பு திறனும் வலுவாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு தொற்று நோய்கள் வருவதற்கான அபாயமும் குறைவு. தற்போது, ​​கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், எது சாப்பிடக்கூடாது என்று WHO சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

1 /6

உப்பு இல்லாமல் சாப்பிடும் உணவு நல்ல சுவை இல்லாமல் போகலாம், ஆனால் அதிகப்படியான உப்பு உங்களை நோய்வாய்ப்படுத்தும், எனவே தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் முக்கியம்.  எனவே இதை மனதில் கொள்ளுங்கள். இது தவிர, அதிக இனிப்பு சாப்பிடுவதும் பல நோய்களை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை பானங்கள், பழச்சாறுகள், குளிர் பானங்கள் போன்றவற்றையும் இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது..  

2 /6

கொரோனா காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் அதிக திரவ உணவை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், ரத்தம், உடலில் உள்ள  ஒவ்வொரு உறுப்புக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும், அதே நேரத்தில் உடலில் சேமிக்கப்படும் நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது. இது தவிர, குடிநீரால் உடலின் வெப்பநிலையும் கட்டுக்குள் இருக்கும்.

3 /6

ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா. ஸ்ட்ராபெர்ரி, சாத்துக்குடி, அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு - இவை நீங்கள் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள். இது தவிர, குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, எலுமிச்சை, கொத்தமல்லி, ப்ரோக்கலி, பச்சை மிளகாய் - இந்த காய்கறிகளையும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடுதலாக, முழு பருப்பு வகைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

4 /6

மாவு, ஓட்ஸ், சோள மாவு, தினை மாவு, பழுப்பு அரிசி - இதுபோன்ற முழு தானியங்களையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், பாதாம், தேங்காய், பிஸ்தா ஆகியவற்றை தினமும் சாப்பிடுங்கள்.

5 /6

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிவப்பு இறைச்சியை உண்ணலாம், சிக்கன், முட்டை  போன்றவற்றை வாரத்திற்கு 2 முதல் 3 முறை சாப்பிடலாம். அசைவ உணவில் புரதமும் நிறைந்துள்ளது, இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

6 /6

1. சாப்பிடுவதற்கு முன் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவுங்கள்.  சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கலாம். 2. சமைத்த உணவு மற்றும் சமைத்த உணவை தனித்தனியாக வைத்திருங்கள், இதனால் சமைக்காத உணவில் இருக்கும் கிருமிகள் சமைத்த உணவை அடையாது. 3. சமைத்த மற்றும் சமைக்காத உணவுக்கு வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் காய்கறி நறுக்க சுத்தமான பலகைகளைப் பயன்படுத்துங்கள். 4. காய்கறிகளை தேவைக்கு அதிகமாக சமைக்க வேண்டாம். அவ்வறு செய்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அழிந்து விடும். (குறிப்பு: எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு Zee News பொறுப்பேற்காது.)