புதிய கேப்டன்... மூத்த வீரர்களுக்கு ஓய்வு... இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா புது பிளான்!

IND vs SA Series: இந்தியாவுக்கு எதிரான மூன்று தொடர்களுக்குமான தென்னாப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது. 

  • Dec 04, 2023, 21:14 PM IST

 

 

 

 

 

1 /7

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

2 /7

அந்த வகையில், இந்த மூன்று தொடருக்கான இந்திய அணி சில நாள்களுக்கு முன் அறிவித்த நிலையில், தென்னாப்பிரிக்கா இன்று மூன்று தொடர்களுக்குமான அணிகளை அறிவித்துள்ளது. 

3 /7

தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து டெம்பா பவுமாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி காக் ஓடிஐ அரங்கில் ஓய்வு பெற்றதை அடுத்து, மார்க்ரம் இரு பார்மட்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   

4 /7

ககிசோ ரபாடா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் உள்நாட்டு தொடரில் விளையாட உள்ளார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்.   

5 /7

யான்சன், லுங்கி இங்கிடி, கோட்ஸி ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  

6 /7

டெஸ்ட் போட்டிகளில் சில வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பேட்டர்கள் டேவிட் பெடிங்ஹாம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதில் வந்தனர்.

7 /7

விக்கெட் கீப்பர்-பேட்டர் கைல் வெர்ரைன் மற்றும் ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்குத் திரும்புகின்றனர்.