மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்

7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.

7th Pay Commission: இன்னும் சில நாட்களில் புதிய அரசாங்கம் அமையும். அதன் பிறகு அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். எனினும், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்றே கூறப்படுகின்றது. இதை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

1 /9

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்து வரும் சில மாதங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கும். ஜனவரி 2024-இல் அகவிலைப்படி (Dearness Allowance) 4 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து மொத்த அகவிலைப்படி 50% -ஐ எட்டியது. இனி ஜூலையில் மிகப்பெரிய அளவில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 /9

அகவிலைப்படி 50% என்ற குறிப்பிட்ட அளவை எட்டியதையடுத்து, கடந்த சில மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் மேலும் பல அலவன்ஸ்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது.   

3 /9

இதற்கிடையில், அடுத்த டிஏ உயர்வு (DA Hike) பற்றிய பேச்சுகள் தொடங்கிவிட்டன. தற்போது அகவிலைப்படி 50% என்ற நிலையில் இருப்பதால், அடுத்த அகவிலைப்படி குறித்த பல வித ஊகங்களும் உள்ளன. அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா அல்லது, 50% -ஐத் தாண்டி அதிகரிக்குமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. 

4 /9

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன் அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி உயர்வு மீண்டும் 1%, 2% என துவக்கப்படலாம் என்ற வழிமுறை உள்ளது. எனினும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என கூறப்படுகின்றது. ஆகையால் இதை தீர்மானிப்பது மத்திய அரசின் கையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

5 /9

இன்னும் சில நாட்களில் புதிய அரசாங்கம் அமையும். அதன் பிறகு அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். எனினும், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் (Basic Salary) மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்றே கூறப்படுகின்றது. பொதுவாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இரு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகின்றது

6 /9

DA மற்றும் DR 50% வரம்பை தொடும் நிலையில், DA மற்றும் DR தானாகவே அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்ற ஊகங்கள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம் ஜூலை 2024 முதல் அதிகரிக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.

7 /9

இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்கும் ஏஐசிபிஐ தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜனவரி மாத தரவுகள் மட்டுமே இதுவரை வந்துள்ளன. மே மாதமாவது இவை வெளியிடப்படும் என்று பலர் எண்னி இருந்த நிலையில், மே 31 ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய எண்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2024க்குப் பிறகு தொழிலாளர் பணியகம் எந்த எண்களையும் வெளியிடவில்லை. 

8 /9

இதன் காரணமாக, ஜூலை 2024 இல் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதை மதிப்பிடுவது கடினமாகிவிட்டது.  தொழிலாளர் பணியகத்தின் இந்த முடிவால் நிபுணர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் இவை ஒன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.