இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய செய்தி: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 03:03 PM IST
  • இலங்கையில் உள்ள இந்தியர்கள் அலர்ட்.
  • இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.
  • இந்த இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய செய்தி: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு title=

இலங்கையில் உள்ள இந்தியர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்யும் பொழுது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தனித்தனி இணைய தளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்கள் www.hcicolombo.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இலங்கையில் தங்கி இருக்கும் இந்திடர்கள் https://hcicolombo.gov.in/national_registration_nris என்ற இணையதளத்திலும், அங்குள்ள இந்திய மாணவர்கள், https://hcicolombo.gov.in/national_registration_students என்ற இணையதளத்திலும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு +94 - 11 - 242860 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | 'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையுடன் வன்முறை சம்பவஙளும் நாளுக்கு நாள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பேசிய இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தவறியதால் கோபமடைந்த சிலர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | 'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' - இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News