பீஸ்ட் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய விஜய்யின் தந்தை!

பாக்ஸ் ஆபிசில் 'பீஸ்ட்' படம் வெற்றி பெற்றாலும், இந்த படம் பலருக்கும் திருப்தியை அளிக்காமல் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2022, 03:09 PM IST
  • பீஸ்ட் படம் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளது.
  • இந்த படத்திற்கு இரண்டு வித விமர்சனங்கள் கிடைத்தது.
  • விஜய்யின் தந்தை பீஸ்ட் படம் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.
பீஸ்ட் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய விஜய்யின் தந்தை! title=

சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றது.  தற்போது விஜய்யின் தந்தையும், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் முதல் முறையாக பீஸ்ட் படம் பார்த்த அனுபவம் குறித்து பேட்டியொன்றில் கூறியுள்ளார்.  இப்படம் வெளியாவதற்கு முன்னர் படம் நன்கு வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்தியவர் இப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் படம் ஏன் அதிகப்படியான எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது என்பது குறித்தும் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | நெல்சன் - ரஜினி படம் கைவிடப்பட்டதா? உண்மை என்ன

அவர் படம் பற்றி கூறுகையில், இந்த படத்தை பற்றி கூறுவதற்கு முன்னர் படத்தில் அமைந்த பாடல்களை பற்றி கூற வேண்டும், இதிலுள்ள பாடல்களை பார்க்கும் போது நான் என் வயதை மறந்தேன், விஜய்யின் தந்தை என்பதையும் மறந்து ஒரு வெறித்தனமான ரசிகன் போல பாடலை உற்சாகத்துடன் பார்த்தேன்.  படத்தின் இடைவேளை நேரத்திலேயே பலரும் பலவிதமான விமர்சனங்களை கூறினார்கள், சிலர் படம் சரியில்லை என்றும், சிலர் சூப்பர் என்றும் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர்.  படத்தை ஆரம்பத்தில் பார்க்கும்போது இருந்த ஆர்வம் படத்தின் இறுதியில் இல்லாமல் போனது, இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை சரியாக அமையவில்லை என்பது தான்.

இது முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள படம், திரைக்கதையில் கவனத்தை செலுத்த தவறிவிட்டார்கள்.  இளம் இயக்குனர்கள் ஒருசில வெற்றி படங்களை கொடுத்த பின், பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால், படத்தின் கதையை பற்றி சிறிதும் யோசிக்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு படம் எடுத்துவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் பேசியவர், நடனத்திற்கு பெயர் போனவர் விஜய் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று மற்றும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றாலும் இந்த படம் பலருக்கும் திருப்தியை அளிக்காமல் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.  நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்திருந்தனர்.  இப்படம் பாக்ஸ் ஆபிசில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

மேலும் படிக்க | தனுஷ் பட வில்லனின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News