‘ஜெயிலர்’ படம் குறித்து நெல்சனிடம் பேசிய விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

நடிகர் விஜய் ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 06:30 AM IST
  • நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம், ஜெயிலர்.
  • ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
  • இந்த படத்திற்காக நடிகர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர்’ படம் குறித்து நெல்சனிடம் பேசிய விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?  title=

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமாரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். 

ஜெயிலர் திரைப்படம்:

‘பீஸ்ட்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

ரஜினியின் கம்-பேக்:

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், இவர் நடிக்கும் படங்கள் நன்றாக ஓடினாலும் கடந்த சில ஆண்டுகளாக விமர்சன ரீதியாக அவை பயங்கர அடி வாங்கின. ரஜினியின் கம்-பேக்கிற்காக தமிழ் திரையுலகமே காத்துக்கொண்டிருந்தது. இவரது கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்பங்கள் காெண்டாடும் வெற்றியாக இருந்ததே தவிர, சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதாக பாராட்டப்படவில்லை. இதையடுத்து இவரை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம்தான் ஜெயிலர். ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியான சமயத்தில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று சொதப்பிதால் ரஜினிகாந்திற்கு இவரால் என்ன நேருமோ என ரசிகர்கள் பயந்தனர். யாரும் பயந்தது போல இல்லாமல் ஜெயிலர் படம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

நெல்சனுக்கு தூண்டுகோளாக இருந்த விஜய்:

நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் வெளியான போது வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சனத்தில் ‘படு மொக்கை’ என பெயர் வாங்கியது. இது, நெல்சனின் இதர சினிமா வாழ்வையும் பாதிக்கும் என கருதப்பட்டது. இது குறித்து நெல்சன் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அப்போது தனக்கு ஜெயிலர் படம் குறித்து ரஜினியிடம் பேச அவர்தான் தூண்டுகோளாக இருந்ததாகவும் கூறினார். மேலும், ஜெயிலர் படம் குறித்து பேச ரஜினிகாந்தை சந்திக்க செல்லும் நாளில் தனக்கு விஜய் சில அறிவுரைகளை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஜெயிலர் படத்திற்காக வாழ்த்து:

ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சன மழை பொழிந்தது. இதையடுத்து நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய் குறித்து பேசிய அவர், ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். மேலும், விஜய் ஆரம்பத்திலிருந்தே ஜெயிலர் படத்தில் தான் பணிபுரிவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

வன்மத்தை கக்கிய விஜய் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் விஜய்-அஜித்தான் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டனர். ஆனால், இப்போது அந்த நிலை அப்படியே மாறி விஜய்-ரஜினி என்றாகிவிட்டது. இதற்கு காரணம், விஜய் கடந்த சில ஆண்டுகளாக சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்று வரும் அசுர வளர்ச்சிதான். இவர், ரஜினியின் ஸ்டைலை காப்பி அடிப்பதாக கூறும் ரசிகர்கள், அவரை போலவே இவரும் அரசியலுக்கு வரவுள்ளதை அவ்வப்போது தன் படங்களின் மூலம் ஹிண்ட் கொடுப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மேடையேறி பேசினார். அப்போது “ரஜினிக்கு போட்டி தளபதி விஜய்…” என்று கூறி முடிப்பதற்குள் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்ப தொடங்கினர். பின்னர், “சகோதரர் விஜய் சொன்ன மாதிரி..ரஜினிக்கு போட்டி அவரேதான்…” என்று கூறினார். இந்த சம்பவம் நடந்ததில் இருந்து ரஜினி ரசிகர்களும் விஜய்யின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் மாறி மாறி திட்டி தீர்த்துக்கொண்டனர். இதையடுத்து ஜெயிலர் படம் வெளியான போது விஜய் ரசிகர்கள் சிலர் வேண்டுமென்ற ஜெயிலர் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை அள்ளி வீசினர். வன்மத்தை கக்கும் இந்த செயலில் விஜய் ரசிகர்கள் பலர் ஈடுபட்டனர். 

ஈகோ பார்க்காத விஜய்:

நடிகர்கள் விஜய்க்கும் ரஜினிக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் போட்டியோ பொறாமையோ இல்லை. ரசிகர்கள் செய்யும் இந்த வகையான செயல்களால் இவர்கள் இருவரின் பெயரும் வெளியில் டேமேஜ் ஆவதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நெல்சன் ஜெயிலர் படம் எடுக்க ஒரு காரணமாக இருந்தது விஜய் என்றும், அந்த படத்திற்காக அவர் வாழ்த்து தெரிவித்த செய்தியும் வெளியானதில் இருந்து, “விஜய் ஈகோ பார்க்காத நடிகர்” என ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News