#காலா குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி பதில்!!

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - கர்நாடகா முதல்வர் குமாரசாமி! 

Last Updated : Jun 1, 2018, 12:38 PM IST
#காலா குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி பதில்!!  title=

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - கர்நாடகா முதல்வர் குமாரசாமி! 

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 

முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, நேற்று "காலா" படத்தின் புதிய டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, நேற்று காலா டீசர் வெளியானதில் இருந்து 12 மணி நேரத்திற்குள், 26 லட்சத்துக்கும் அதிகமானோர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர். 

இதையடுத்து, கர்நாடகாவில் காலா படத்திற்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை செய்தது. இது பற்றி கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா ரா கோவிந்த் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி காலா படத்துக்கு தடைவிதித்துள்ளதாகவும். காவிரி பிரச்சனையை குறித்து விவகாரம் எழும் என்றும் தடை செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர். 

இதனை கண்டித்து திரைப்பட நடிகர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காலா திரைப்படம் குறித்து கர்நாடகா முதலவர் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை பற்றி பரிசீலித்து வருகிறேன். கன்னட திரைப்பட வர்த்தகசபை காலா படத்தை வெளியிடக்கூடாது என மனு அளித்துள்ளது. 

காலா கர்நாடகாவில் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை என மனுவில் கூறியுள்ளனர். எனவே, மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 

Trending News