முருகதாஸ், ஸ்ரீகாந்த் அடுத்து லாரன்ஸ்.. தொடரும் ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்

தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 14, 2018, 09:06 AM IST
முருகதாஸ், ஸ்ரீகாந்த் அடுத்து லாரன்ஸ்.. தொடரும் ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ் title=

தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். 

தற்போது அவரது பட்டியலில் சிக்கி உள்ளவர் நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ். அவரைக்குறித்து தனது வலைதளத்தில் ஸ்ரீ ரெட்டி கூறியது, ஒரு நாள் எனது சில நண்பர்கள் மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ்சை மஸாப்டாங்க்கில் உள்ள கோல்கொண்டா ஹோட்டலில் சந்தித்தேன். அவர் என்னை அறைக்கு அழைத்துச் சென்றார். நான் அறையில் நுழைந்தவுடன் குரு ராகவேந்திர ஸ்வாமி புகைப்படங்களும், சில ருத்ராக்ஷங்கள் இருந்ததை நான் பார்த்தேன். அவர் என்னிடம் நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் எனவும், புதிதாக நடிக்க வருவோருக்கு வாய்ப்புகள் கொடுப்பதாகவும் கூறினார். அவரை நான் நம்ப ஆரம்பித்தேன். மேலும் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு தங்க இடம் கொடுத்து வருகிறேன். அவர் கூறியது என்னை கவர்ந்தது. நான் மெதுவாக மெதுவாக அவர் உண்மையான நிறத்தை உணர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் என் வயிற்றை காட்டுமாறு என சொன்னார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சியான அசைவுகளை செய்து காட்டுங்கள் என்று கூறினார். பிறகு அவர் என்னுடன் சவாரி செய்தார். உடனடியாக, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதன் பிறகு எங்களுடைய நட்பு சிலகாலம் தொடர்ந்தது. ஆனால், பெல்லாம்கொண்டா இதில் வில்லனாக மாறினார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அதில் முதலில் சிக்கியவர் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ். அவரைக்குறித்து ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஞாபகம் இருக்கா கிரீன் பார்க் ஹோட்டல்? நமக்கு வெளிகோண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் பழக்கம் ஆனது. நீங்கள் எனக்கு வாக்கு கொடுத்தீர்கள். அங்கு நிறைய.... ஆனால் இதுவரை உங்கள் வாக்கை நிறைவேற்றவில்லை. நீங்கள் நல்ல மனிதர் சார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், இன்று நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி எழுதியுள்ளார். அதில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கா? நான் மிகவும் நேசித்தேன் நீங்கள் சாப்பிட்ட ……. புரிந்து கொள்ளுங்கள். அன்று என்னுடன் நீங்கள் கிளப்பில் நடனமாடிய பொழுது படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்கள். உங்களுக்கு நினைவிருக்கா...? என கூறியுள்ளார். மேலும் #tamilleaks என்ற ஹேஸ்டேக் போட்டுள்ளார். 

தமிழ் லீக்ஸ் ( #tamilleaks ) என்ற ஹேஸ்டேக் மூலம் இன்னும் யாரெல்லாம் சிக்க போகிறமோ? என்று பல தமிழ் திரைதுறையை சார்ந்தவர்கள் பயத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Trending News