உறுதியானது ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி! அவரே சொன்ன தகவல்!

'1947' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸோடு இணைவது குறித்து பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 01:20 PM IST
  • '7 ஆம் அறிவு' படத்திற்கு சிவகார்த்திகேயன் வசனம் எழுதியுள்ளார்.
  • '1947' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
  • மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார்.
உறுதியானது ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி! அவரே சொன்ன தகவல்! title=

தமிழ் சினிமாவின் பிரபலமான கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவாக இருக்கும் இவர் தமிழில் பல சிறப்பான படங்களில் நடித்திருக்கிறார்.  அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடைபெற்ற '1947' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  என்.எஸ்.பொன்குமார் இயக்கும் இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருக்கிறார்.  இப்படத்தில் கெளதம் கார்த்திக், புகழ், ரேவதி சர்மா, ஜேசன் ஷா மற்றும் ரிச்சர்ட் ஆஷ்டன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் படிக்க | பத்து தல மற்றும் விடுதலை படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

'1947' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கும் முருகதாஸுக்கும் இடையேயான தொடர்பினை பற்றி பேசினார்.  தாங்கள் இருவரும் ஒரு முக்கியமான திட்டத்திற்காக தயாராகி வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பினை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது இது முதன்முறையல்ல, ஏற்கனவே இவர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து '7 ஆம் அறிவு' படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.  அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தொகுத்து வழங்கினார்.  மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு இருந்ததை தொடர்ந்து  பலரும் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.  கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்துவரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி மீண்டும் தனது இயக்குனர் அவதாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது சிவகார்த்திகேயன், மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.  அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் 'எஸ்கே21' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | PS-2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கைகோர்த்த ரெட் ஜயண்ட் மூவிஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News