மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க தயார் -சிம்பு

Last Updated : May 24, 2016, 02:58 PM IST
மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க தயார் -சிம்பு title=

பல்வேறு பிரச்சனைகலால் கடந்த 3 வருடங்களாக தள்ளிப் போன 'இது நம்ம ஆளு' படம் மே 27ம் தேதி ரீலிஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைக்குறித்து சிம்பு அளித்த பேட்டியில் கூறியது:-  எனக்கும் நயந்தாராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. படப்பிடிப்பு தள்ளி போனதால்தான் நயன்தாராவால் ஒரு பாடலுக்கு ஆட முடியவில்லை மற்றபடி ஒன்றும் இல்லை. நல்ல கதையம்சம் உள்ளம் படம் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன். படம் தாமதமானதற்கு குறிப்பா யாரையும் காரணம் சொல்ல முடியாது. ஆனால் படம் நன்றாக வந்திருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும். தற்போது படக்குழுவினர் அனைவரும் சந்தோஷமாக உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

திருமணத்தை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் "எனக்குத் திருமணம் நடப்பது என்பது என்னுடைய கையில் இல்லை. கடவுள் பார்த்துக் கொள்வார். எனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக நடக்கும்'' என்று கூறினார்.

சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்த நடித்த முதல் படம் ''வல்லவன்''. இப்படத்தில் தான் இருவரும் காதலர்களாக மாறினார்கள். சில மாதங்களிலே எதிர்பாராதவிதமாக இவருடைய காதல் முறிந்து போனது.  அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' விரைவில் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

Trending News