உச்சகட்ட கோபத்தில் ஷண்முகம், ரத்னாவை தூக்க கிளம்பும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல்

Zee Tamil Anna Serial August 1st 2023 Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2023, 01:28 PM IST
உச்சகட்ட கோபத்தில் ஷண்முகம், ரத்னாவை தூக்க கிளம்பும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி நான்கு ரவுடிகளுடன் வீட்டிற்கு வந்து ரத்னா கழுத்தில் இன்னைக்கு நைட்டே தாலி கட்ட போறேன் என தாலியை எடுத்து காட்ட பரணி, பாக்கியம் சௌந்தரபாண்டி என எல்லாரும் ஷாக் ஆகினர். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இதுவரைக்கும் மத்தவங்கள தான் நான் கைது பண்ணி இருக்கேன், ஆனால் எனையே இன்னிக்கு கைது பண்ண வச்சிட்டான், இந்த அவமானத்தை மறக்க அந்த ரத்னா கழுத்துல இன்னைக்கே தாலி காட்டி அவளை கொடுமைப்படுத்தி அவ அண்ணனை நம்ம கால்ல விழ வைக்கணும் என திட்டத்தை சொல்ல சௌந்தரபாண்டி நானே நேரா போறேன், அவளை நைட்டோட நைட்டா தூக்கிட்டு வரேன் என சொல்கிறார். 

அப்படியே மறுபக்கம் ஷண்முகம் அருவாளுக்கு சாணம் பிடித்து கொண்டிருக்க வைகுண்டம் இதெல்லாம் வேண்டாம்யா, நான் போய் சௌந்தரபாண்டி கிட்ட பேசி பார்க்கிறேன் என்று சொல்ல அவன் தங்கச்சியை கட்டி கொடுக்க சொல்லுவான், கட்டி தர உனக்கு சம்மதமா என்று ஷண்முகம் கேட்க வைகுண்டம் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். விருப்பம் இல்லாத கல்யாணம் ஒரு பொண்ணுக்கு நடக்க கூடாது, அதுக்கு எதிர்த்து நிற்கணும், 10 பேர் வந்தாலும் வெட்டி சாய்ச்சிடுவேன் என வீர வசனம் பேச இசக்கி வீட்டுக்குள் சென்று கத்தி, அரிவாள்மனை என எல்லாத்தையும் எடுத்து வந்து இதுக்கும் சாணம் பிடி, உன் கூட நாங்களும் எதிர்த்து நிற்கிறோம் என்று சொல்ல ஷண்முகம் என் தங்கச்சிங்க இப்படி தான் இருக்கனும் என சந்தோஷப்படுகிறான்.

அடுத்து வைகுண்டமும் ஒரு வேல் கம்மை எடுத்து வந்து நானும் நிற்கிறேன் என்று சொல்கிறார், இங்கே சௌந்தரபாண்டி சொன்னதை கேட்டு பாக்கியம் அங்க போய் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது, என் மருமகன் நீங்க நினைக்குற மாதிரி லேசு பட்டவன் கிடையாது, நீங்க தான் தெறிச்சு ஓடி வர போறீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு அடிக்க கை ஒங்க முத்துப்பாண்டி தடுத்து நிறுத்தி இவங்களை அடிக்கறதால் ஒன்னும் ஆக போறது கிடையாது என்று சொல்ல பாக்கியம் விடுடா என்ன பன்றாரு பாக்கலாம், ஒன்னு வெட்டி போடுவாரு, இல்ல என் அப்பன் வீட்டுக்கு அனுப்புவாரு அதுக்கெல்லாம் நான் பயப்படுற மாதிரி இல்லை என பதிலடி கொடுக்கிறாள். 

இதையெல்லாம் தாண்டி சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டுக்கு கிளம்ப பரணி அங்க என்ன நடக்குதுனு தெரியலையே என்று போன் கால் செய்ய தங்கைகள் நடப்பதை சொல்கின்றனர், பிறகு வீடியோ காலில் ஷண்முகம் முரட்டு தனமாக ஈட்டியை வைத்து பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்க்கின்றனர், அடுத்ததாக வைகுண்டம் என்னமா இப்படி ஆகிருச்சு என்று வருத்தப்பட பாக்கியமும் பரணியும் உசுரை மட்டும் விட்டுட்டு அவரை அடிச்சி அனுப்புங்க என்று சொல்கின்றனர். இதற்கிடையில் சிவபாலன் இசக்கி சாப்பிட்டியா என்று கேட்டு ஃபன் செய்கிறான்.

ஒரு பக்கம் ரத்னாவை தூக்க சௌந்தரபாண்டி கிளம்பிய நிலையில் இன்னொரு பக்கம் ஷண்முகம் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்க அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News