ஆயிரத்தில் ஒருவன்: உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை மிகைப்படுத்தி கூறினோம் என்று செல்வராகவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 02:24 PM IST
ஆயிரத்தில் ஒருவன்: உண்மையை போட்டுடைத்த செல்வராகவன் title=

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை மிகைப்படுத்தி கூறினோம் என்று செல்வராகவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2010ம் ஆண்டு தமிழ் சினிமாவை மட்டும் இன்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன்.  செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர்.  நடிகர் கார்த்திக்கு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது படம் ஆகும்.  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ரவீந்திரன் இப்படத்தை தயாரித்தார்.

சோழ தேசத்து மக்களை தேடி செல்லும் ஒரு ஆக்சன் அட்வெண்சர் படமாக இருந்தது ஆயிரத்தில் ஒருவன்.  படம் வெளியான காலகட்டத்தில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.  ஆனால், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் சரியாக ஓடவில்லை.   படம் பார்த்தவர்கள் முழு நீள கதையும் புரியவில்லை என்று விமர்சனம் வைத்தனர்.  ஆனால் படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிலிம் பெஸ்டிவல், திரையரங்குகளில் ரீரிலீஸ்  என எங்கு திரையிட பட்டாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.  நல்ல படம் ஓடாமல் போய் விட்டது என்று வருதப்படுபவரும் உண்டு. 

சில மாதங்களுக்கு முன் அவரது சகோதரர் தனுசை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார் செல்வராகவன்.   ஆனால், படம் 2024ம் ஆண்டு தான் வெளியாகும் என்று அறிவித்தார்.  தனுஷ் இதுவரை வரலாற்று படங்களில் நடித்தது இல்லை என்பதால் தனுஷ் ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். 

 

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி தற்போது செல்வராகவன் கூறியிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிகள். ஆனால், இது ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி படமாக அறிவிக்க முடிவு செய்தோம். என்ன முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சராசரியாக ஓடாத படம் என்று கருதப்பட்டது! என்ன தவறு நடதாலும் பொய் சொல்ல கூடாது' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது செல்வராகவன் படங்களில் நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் சாணிக்காயிதம் திரைபடத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.  மேலும்,  விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் செல்வராகவன்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! Android Link - https://bit.ly/3hDyh4G Apple Link - https://apple.co/3loQYeR

Trending News