சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா..? அடுத்த இடம் யாருக்கு தெரியுமா? முழு விவரம்..!

SaReGaMaPa Title Winner: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் சரிகமப சீசன் 3. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2023, 01:17 PM IST
  • சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது.
  • டைட்டில் வின்னர் புருஷோத்தமன்.
  • பிற இடங்களை பிடித்தவர்கள் யார் தெரியுமா?
சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா..? அடுத்த இடம் யாருக்கு தெரியுமா? முழு விவரம்..! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக கருதப்படுவது சரிகமப இசை நிகழ்ச்சி. வயது வித்தியாசமின்றி அனைவருக்குள்ளும் இருக்கும் பாடல் திறமைய வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இறுதிப்போட்டி நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் நடிகை சினேகா, காமெடி நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் சிரப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

சரிகமப நிகழச்சி: 

ரசிகர்கள் வெகுவாக ஈர்த்த இந்த நிகழ்ச்சியினை நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான அர்ச்சனா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தி வந்தனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் ஜூன் 18-ம் தேதியான நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

மேலும் படிக்க | பிரபல ராப் பாடகர் மேடையில் மயங்கி விழுந்து மர்ம மரணம்...!

இறுதிப்போட்டியின் போட்டியாளர்கள்: 

முதல் மற்றும் இரண்டாவது சீசனை வெற்றிகரமாக முடித்த சரிகமபா டீம், வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர்ஷினி, நாகார்ஜூன் ஆகியோர் டைட்டிலை வெல்வதற்கான கட்டத்தில் பங்கேற்றனர். 

Sarigamapa

சிறப்பு விருந்தினர்கள்…

இந்த நிகழ்சியில், ஸ்ரேயா கோஷல், ஜிவி பிரகாஷ், சந்தானம், பாடகர் மனோ, பாடகிகள் வைக்கோம் விஜயலட்சுமி, நித்தியஸ்ரீ மஹாதேவன், சுபா, அஸ்வின் மற்றும்  தேஜு  என பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இவர்களுடன் சரிகமப சீசன் 3 கிராண்ட் பைனல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

டைட்டில் வின்னர்:

தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இப்போட்டியில் பலரின் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதை ரசிகர்களும் சிறப்பு விருந்தினர்களும் பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கியது. முடிவில், ருஷோத்தமன் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று சாதனை படைத்தார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 

அடுத்தடுத்த இடம் யாருக்கு?

புருஷோத்தமன் டைட்டில் வின்னர் ஆனதைத்தொடர்ந்து, அவரது சக போட்டியாளர்களும் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். இதில், ராகவர்ஷினி இரண்டாம் இடத்தை பிடிக்க அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும் மூன்றாவது இடத்தை பிடித்த லக்ஷனாவிற்கு 3 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.  இந்த மூன்று இடங்களைத் தொடர்ந்து நாகர்ஜுனாவிற்கு மக்களின் மனம் கவர்ந்த பாடகர் என்ற பெயரில் பாராட்டி ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.  திறமையை மட்டுமே நம்பி போட்டி போட்டு வெற்றி பெற்ற சரிகமப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

ஒளிபரப்பு: 

சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சரிகமப லிட்டில் சேம்ப் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நேரலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரிகமப நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு! இனி இவர்களால் நடிக்க முடியாதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News