'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இவ்வளவு காமெடியன்களா?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2022, 08:14 PM IST
  • வடிவேலு சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
  • தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்கிறார்.
  • மாமன்னன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இவ்வளவு காமெடியன்களா? title=

தமிழ் சினிமாவில் வடிவேலுவை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள், இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமன்றி இவரது உடல் அசைவுகளே சிரிப்பை ஏற்படுத்திவிடும்.  இவர் தற்போது ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.   இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கம் இந்த படத்தை, சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார்.  2006-ல் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் 'நாய் சேகர்', இதனை அடிப்படையாக வைத்து தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?

தற்போது படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இதில் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் மற்றும் இடிஷ் பிரசாந்த் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ளனர்.  சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் உடல்நிலை தேறினர்.  இதனால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த திரைப்படம் இந்த ஆண்டின் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vadivelu

அதனை தொடர்ந்து வடிவேலு மீண்டும் ஒரு பெரிய ப்ராஜெக்டில் இணைந்துள்ளார்.  மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படத்தில் உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலர் நடிக்கின்றனர்.  'மாமன்னன்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் சமீபத்தில் சேலத்தில் நடைபெற்று முடிந்தது.  இதுவரை ஓய்வெடுத்த வடிவேலு மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News