நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன் - KPY பாலா பேட்டி

நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 21, 2024, 03:52 PM IST
  • என்னுடைய உதவி செய்யும் என்னம் தொடரும்.
  • நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன்.
  • மதுரையில் KPY பாலா பேட்டி.
நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன் - KPY பாலா பேட்டி title=

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் அழகுநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சின்னத்திரை காமெடி நடிகர் KPY பாலா கலந்து கொண்டு அழகு நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தனது கையெழுத்தை பதிவு செய்து குத்து விளக்கு ஏற்றி கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலா பேசியதாவது, லாரன்ஸ் அவருடன் சேர்ந்து உதவி செய்து வருவது குறித்த கேள்விக்கு? எதிர்பார்ப்புக்கு மேலே ஒரு காரணம் நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான்., என்னுடைய உதவி செய்யும் என்னம் தொடரும். நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன் அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு ஐலவ்வூ லாரன்ஸ் அண்ணா. 

மேலும் படிக்க | தளபதி விஜய்யை பார்த்து அரசியல் ஆசையா? விஷால் பேட்டி!

நலத்திட்ட வசதிகள் செய்ய பெரிய பெரிய நடிகர்கள் முன்வருவதில்லை என்ற கருத்துக்கு? நம்ம வேலைய நாம ஒழுங்காக செய்தால் போதும், பெரிய பெரிய நடிகர்கள் பற்றி பேச எனக்கு தகுதியில்லை. லாரன்ஸ் அண்ணா கூட இருக்கிறது ரொம்ப சந்தோசமாக இருக்கு. தேர்தலில் வாக்கு பதிவு குறைவாக உள்ளது பொதுமக்களுக்கு உங்களது கருத்து என்ற கேள்விக்கு? பொதுமக்கள் தான் எனக்கு கருத்து சொல்லனும் நான் பொதுமக்களுக்கு கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல.!நான் என்னுடைய ஒட்டை பதிவு செய்து விட்டேன் என்றார். சமீபத்தில் நடிகர் விஜய் நடத்த கில்லி படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகியது குறித்த கேள்விக்கு? அப்போ இருந்த மாதிரியே இப்பவும் மாஸ் தான், FDFS பார்த்தேன் படம் வேற லெவல் தான் House full ஆக இருந்தது என்றார்.

கில்லி ரீ- ரீலிஸ் கொண்டாட்டம்!

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று கில்லி திரைப்படம் வெளியானது. கில்லி படம் விஜய் ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படமானது 20 ஆண்டுகளுக்கு பின் இதே தேதியில் இன்று மீண்டும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் ரீ ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விஜயின் கில்லி படம் இன்று காலை திரையிடப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்களும் இருக்கைகள் நிரம்பியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News