கத்துவா சம்பவத்தை பற்றிப் பேசவே அருவெறுப்பாக உள்ளது -அமிதாப்

கத்துவா சம்பவத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தார் 75 வயதான பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 19, 2018, 08:53 PM IST
கத்துவா சம்பவத்தை பற்றிப் பேசவே அருவெறுப்பாக உள்ளது -அமிதாப் title=

கடந்த ஜனவரி 10-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கத்துவா, உனா சம்பவம்: நீதி கிடைக்கும் உறுதி அளித்த பிரதமர்!!

இந்த நிலையில், இன்று தான் நடிக்கும் படமான "102 நாட் அவுட்" படத்தின் "பாட்புபா" என்ற பாடல் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அமிதாப்பிடம் நிருபர்கள் கத்துவா சம்பவத்தை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமிதாப், இச்சம்பவத்தை பற்றிப் பேசவே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. அதைப் பற்றி பேசுவது இழிந்தவையாகும். அந்த விவாதத்தை பற்றி நான் கவலைப்படுகிறேன்" என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பச்சன் & கபூர் :"102 நாட் அவுட்" ட்ரைலர்

குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் "102 நாட் அவுட்". 27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தை உமேஷ் சுக்லா இயக்குகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News