Puducherry: புதுச்சேரியில் விரைவில் புதிய திரைப்பட நகரம்?

புதுச்சேரியில் புதிய சினிமா நகரம் அமைப்பது தொடர்பாக நடிகர் பிரசாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 02:26 PM IST
  • சென்னையை போல புதுச்சேரியில் 100 ஏக்கரில் சினிமா நகரம் உருவாக்க அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்
  • தற்போது தமிழ் சினிமா படப்பிடிப்புகள் பெரும்பாலும் போரூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிலிம் சிட்டியில் நடத்தப்படுகின்றன
  • புதுச்சேரியில் படப்பிடிப்புகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினார்.
Puducherry: புதுச்சேரியில் விரைவில் புதிய திரைப்பட நகரம்?  title=

Puducherry புதுச்சேரியில் புதிய சினிமா நகரம் அமைப்பது தொடர்பாக நடிகர் பிரசாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் சினிமா படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் புதுச்சேரியில் தொடர் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.  விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்,  பிரபுதேவா நடிக்கும் பெயர் வைக்கப்படாத புதிய படம், பிரசாந்த் நடிக்கும் அந்தகண் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் என நிறைய படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன.  மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறிது நாட்களுக்கு முன் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  

prasanth

இந்நிலையில், நேற்று மாலை புதுச்சேரி சட்டசபையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.  சென்னையை போல புதுச்சேரியில் 100 ஏக்கரில் சினிமா நகரம் உருவாக்க அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பரிசீலினை செய்வதாக  முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமா படப்பிடிப்புகள் பெரும்பாலும் போரூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிலிம் சிட்டியில் நடத்தப்படுகின்றன.  இங்கு இடம் கிடைக்காத பட்சத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி செல்கின்றனர்.  மேலும் கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் பெரும்பாலான படங்கள் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடத்தப்படுகின்றது.  கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம், அருண் விஜய் நடிக்கும் #AV33 போன்ற படங்களின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ புதுச்சேரி முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி!

சிறிது தினங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரியில் படப்பிடிப்புகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News