பாக்கியலட்சுமியில் நடக்கயுள்ள புதிய டுவிஸ்ட்..டென்ஷனில் ராதிகா..

வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், கோபியின் தாய் கோபியிடம் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கெஞ்சுகிறார். இதை ஓரமாக நின்று பார்த்த ராதிகா அதிர்ச்சியடைகிறார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2023, 04:14 PM IST
  • பாக்கியலட்சுமி சீரியலில் புதிய டுவிஸ்ட்.
  • பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.
  • சண்டையிட்டு வீட்டை விட்டுக் கிளம்பும் ராதிகா.
பாக்கியலட்சுமியில் நடக்கயுள்ள புதிய டுவிஸ்ட்..டென்ஷனில் ராதிகா.. title=

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இரவு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்றே கூறலாம். பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். 

அதன்படி பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடந்தார். அவரை அவரது முன்னாள் மனைவியான் பாக்கியா தனது மகன் எழிலுடன் ராதிகா வீட்டிற்கு கொண்டு வந்தது சேர்த்தார். இதனால் ராதிகா கடுப்பாகி பாக்கியாவிடம் சண்டையிடுகிறார். பின்னர் செம்ம போதையில் இருந்த கோபி ராதிகாவை ஆவேசமாக திட்டி பேசினார்.

மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?

இதனால் கடுப்பான ராதிகா மறுநாள் தன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதையடுத்து அவர்களை கோபி தடுக்கிறார். இரவு என்ன நேர்ந்தது, தான் என்ன செய்தேன், எப்படி வீட்டிற்கு வந்தேன் என எதுவுமே தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகும் கோபி, ராதிகாவின் இந்த செயலால் மேலும் அதிர்ச்சி அடைகிறார். காலில் விழாத குறையாக அவரை தடுக்கிறார். ராதிகா காலில் அவர் விழுந்து கெஞ்சுவதை, தெருவே வேடிக்கை பார்க்கிறது. மேலும் அவருடைய அப்பா, அம்மா, இனியா, எழில், செழியன் என அவரது குடும்பத்தினரும் இதை வருத்தத்துடனும் அவமானத்துடனும் பார்க்கின்றனர்.

இந்நிலையில், வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், கோபியின் தாய் கோபியிடம் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கெஞ்சுகிறார். இதை ஓரமாக நின்று பார்த்த ராதிகா அதிர்ச்சியடைகிறார். இதன்பின் பாக்கியாவை சந்திக்கும் ராதிகா, மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ போறீங்களா பாக்கியா என கேட்க பாக்கியா அதற்கு நான் தூக்கி போட்ட வாழ்க்கையை தான் நீங்க இப்போ வாழ்த்து கொண்டிருக்கீங்க என்று கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது. எனவே இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்று பாக்கியலட்சுமி சீரியலில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News