அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2024, 04:21 PM IST
  • பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.
  • முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா? title=

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சௌந்தரபாண்டி அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர். 

மறுபக்கம் பதவியேற்ற பரணி கோவில் நகைகளை பரிசோதனை செய்ய அத்தனையும் கவரிங் என தெரிய வருகிறது. இதனால் நகையை சௌந்தரபாண்டி தான் எடுத்திருக்க வேண்டும் என எல்லோரும் சொல்கின்றனர். சௌந்தரபாண்டி என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என் வீட்டுக்கு வந்து தேடிப் பாருங்க என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த பாண்டிய மாரியம்மன் நடைப்பெற்று இருப்பதை கண்டு பிடிக்கின்றனர். உடனே சௌந்தரபாண்டி அக்கா நகையை நீயா எடுத்த என்று பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார். 

இதையடுத்து பாண்டியம்மா கைது செய்யப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News