மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சஞ்சனா கல்ராணி: மீண்டும் போலீசில் புகாரா?

தற்போது ஜாமீனில் இருக்கும் சஞ்சனா மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 12:01 PM IST
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சஞ்சனா கல்ராணி: மீண்டும் போலீசில் புகாரா? title=

கடந்த ஆண்டு போதைப்பொருள் விவகாரத்தில் அதிக அளவு சர்ச்சையில் இருந்தவர் பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி.  போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தற்போது ஜாமீனில் இருக்கும் சஞ்சனா மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நேற்று முன்தினம், சஞ்சனா (Sanjjana Galrani), பெங்களூரு இந்திரா நகரில் இருந்து வாடகை கார் ஒன்றில் ராஜ ராஜேஸ்வரி நகரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். அப்போது காரில் ஏ.சி போடுவது தொடர்பாக சஞ்சனாவுக்கும், கார் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஏ.சி போடுவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் கார் ஓட்டுநர் சூசை மணி என்பவரை சஞ்சனா திட்டியுள்ளார். இது தொடர்பாக சஞ்சனா மீது சூசை மணி போலீசில் புகார் அளித்தார். சஞ்சனா அவரை தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் அவர் காவல் துறையிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பானதை அடுத்து, நடிகை சஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ: 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தார் எஸ்பிபி: சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி

தனது விளக்கத்தில் சஞ்சனா, “இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். நான் செல்ல வேண்டிய இடத்துக்கு பதிலாக, கெங்கேரி நோக்கி கார் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக நினைத்து டிரைவரிடம் நான் இதைப் பற்றி கேட்டேன். ஆனால் நான் அவரை திட்டவில்லை. இந்த விவகாரத்தில் எனது தரப்பு நியாயத்தையும் போலீசாரிடம் கூறுவேன். கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி நான் கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். 

இது குறித்து கார் டிரைவர் சூசைமணி, “கொரோனா காரணமாக 3 பேரை தான் காரில் ஏற்ற வேண்டும். ஆனால் சஞ்சனாவுடன், அவரைத் தவிர மேலும் 3 பேர் ஏறினார்கள். கொரோனா தொற்று காரணமாக காரில் ஏ.சி.யை குறைத்து வைத்திருந்தேன். ஏ.சி.-ஐ அதிகரிக்கும்படி சஞ்சனா கூறினார். பின்னர் அது குறித்து வாக்குவாதம் செய்யத் துவங்கினார். என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதனால் நான் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். நான் சஞ்சனாவை கடத்தி செல்லவில்லை” என்று தன் தரப்பு வாதத்தை வைத்துள்ளார். 

ALSO READ: போதை மருந்து விவகாரம்: மருத்துவ பரிசோதனையில் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்த நடிகை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News