தளபதிக்கு அடுத்து சியான் - தமிழில் எகிறும் ராஷ்மிகா கிராஃப்?

பா. இரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 19, 2022, 03:17 PM IST
  • விக்ரமை இயக்குகிறார் பா.இரஞ்சித்
  • படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது
  • இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல்
தளபதிக்கு அடுத்து சியான் - தமிழில் எகிறும் ராஷ்மிகா கிராஃப்? title=

சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாக இருக்கிறது. இதற்கான லொக்கேஷன் தேடும் பணியில் பா.இரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி முடிந்தவுடன் சமீபத்தில் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது.

அந்தப் பூஜையில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா திரைக்கதை எழுதுகிறார். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

Pa Ranjith, Vikram

அதுமட்டுமின்றி சியான் 61 படம் பான் இந்தியா படமாக வெளியாகுமென்று தகவல் வெளியான சூழலில், பான்  இந்தியா என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. மொழிக்கு தடையில்லை என பேசியிருந்தார். 

 

இந்நிலையில் பா. இரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை இரஞ்சித் நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அநாகரிகமாக கேள்வி கேட்ட நெட்டிசன் - பதிலடி கொடுத்த நீலிமா ராணி

முன்னதாக படத்தின் பூஜை முடிந்தது செய்தியாளர்களிடம் பேசிய இரஞ்சித், “90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை வைத்தே இந்த படத்தை எடுக்க உள்ளோம். இந்த படம் எடுப்பதற்கே ஒரு பெரிய சவால் உள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க | சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது ! - பிரபுவின் சகோதரிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News