சுமார் 14 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்த கொடூரம்.....

14 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு பிறந்த ஆண்குழந்தை; எப்படி இது சாத்தியம் பாலியல் சீண்டல் நடந்துள்ளதா என காவல்துறையினர் விசாரணை.....

Last Updated : Jan 6, 2019, 07:11 PM IST
சுமார் 14 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்த கொடூரம்..... title=

14 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு பிறந்த ஆண்குழந்தை; எப்படி இது சாத்தியம் பாலியல் சீண்டல் நடந்துள்ளதா என காவல்துறையினர் விசாரணை.....

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் நகரிலுள்ளது ஹாசியேண்டா என்ற தனியார் மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்டு கடந்த 14 ஆண்டுக்கு மேலாக கோமாவில் இருக்கும் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

கோமாவில் இருக்கும் அவர் கர்ப்பமாக இருப்பது பற்றி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யாருக்கும் தெரியாது. இந்நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி கோமாவில் இருந்த பெண் முணு முணுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறைக்கு வந்த செவிலியர் ஒருவர்,  அப்பெண்ணை பார்த்த போது, பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து குழந்தை வெளியேற முயற்சி செய்துள்ளது. பின்னர், மருத்துவர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் எப்படி குழந்தை பிறப்பது சாத்தியம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. கோமாவில் உள்ள அந்த பெண் பாலியல் சீண்டலுக்கு உற்படுத்தபட்டுல்லாரா என மருத்துவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், ‘மருத்துவமனையிலுள்ள ஆண் ஊழியர்களுக்கு DNA சோதனை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

Trending News