தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

சிலருக்கு நிதி நெருக்கடி அதிகம் இருக்கும். கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கும். ஆனால், அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் அவர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடையலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2020, 09:32 AM IST
  • சிலருக்கு நிதி நெருக்கடி அதிகம் இருக்கும். கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கும். ஆனால், அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் அவர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடையலாம்.
  • ஆனால், தொடர்ந்து தோல்வியை சந்தித்தால், அதற்கு வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.
  • மேலும் பணம் வைக்கும் இடத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பணம் சேரும். அசுத்தமான இடத்தில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.
தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!! title=

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க பாடுபடுகிறார்கள். ஆனால், தொடர்ந்து தோல்வியை சந்தித்தால், அதற்கு வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.  இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம். கீழே கூறப்பட்டுள்ள நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, நல்ல தீர்வு கிடைக்கும்.

முதலாவதாக, வீட்டின் கூரையில் குப்பை சேர அனுமதிக்க வேண்டாம். வாஸ்து ரீதியாக, வீட்டின் கூரையில் குப்பை சேர்ந்தால், பொருளாதார சிக்கல் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக, உங்களிடம் செல்வம் சேர வேண்டும் என விரும்பினால், பணம் வைக்கும் உங்கள் அலமாரி அல்லது லாக்கர் சரியான திசையை நோக்கி வைத்திருப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அலமாரி அல்லது லாக்கரில் பணத்தை வைக்கும்போது, லாக்கரின் கதவு கிழக்கு நோக்கி திறக்கும் படி இருக்க வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பணம் சேரும். அசுத்தமான இடத்தில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.

ALSO READ | Horoscope: 10 October 2020, சனிக்கிழமை தினப்பலன்  

மூன்றாவதாக, உங்கள் வீட்டு அலங்காரத்திற்காக  நீர் நிரப்பிய பொருள் ஏதேனும் வைத்திருந்தால், அதை எப்போதும் வடக்கே வைத்திருங்கள். அதே நேரத்தில் நீர் கசிவு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வடக்கு திசை குபேரரின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே தண்ணீரை இந்த திசையில் வைத்திருப்பது செல்வத்தை பெருக்கும். நிதி பிரச்சனை தீரும்

நான்காவதாக, எந்தவொரு நீர் தொட்டியிலிருந்தும், அல்லது குழாய்களில் இருந்தும் தண்ணீர் கசியாமல் கவனமாக இருங்கள். வாஸ்து சாஸ்திரப்படி,  வீட்டிலுள்ள தண்ணீர் விரயமானால்,  செல்வம் தங்காமல் விரயம் ஆகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. தண்ணீர் தொட்டி, டாங்க், குழாய் ஆகியவை சேதமடைந்தால், உடனடியாக அதை சரிசெய்யவும்.

இந்த நான்கு விஷயங்களை மனதில் வைத்திருந்தால், போதும், உங்கள் நிதி, பொருளாதார பிரச்சனை தீர்ந்து நிம்மதியாக வாழலாம்.

ALSO READ | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News