கும்ப ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனால் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!!

ஜோதிட சாஸ்திரத்தில், செல்வம், வளம், ஆடம்பர வாழ்க்கை, நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2022, 12:14 PM IST
  • சுக்கிரன் செல்வத்தின் காரணியாவார்.
  • சுக்கிரன் சனி ராசியில் சஞ்சரிக்கிறார்.
  • சுக்கரனின் ராசி மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கும்ப ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனால் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!! title=

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகத்தின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தரும். அதேசமயம் சில ராசிகளை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

ஜோதிட சாஸ்திரத்தில், செல்வம், வளம், ஆடம்பர வாழ்க்கை, நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது.  மார்ச் 31ம் தேதி சுக்கிரனின் பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த நாளில் சுக்கிரன் காலை 8:54 மணிக்கு கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவான் கருதப்படுகிறார். சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். உண்மையில், இந்த ராசிக்கு 11வது வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் இருக்கும். 11வது வீடு வருமானத்தை குறிப்பதாக கருதப்படுகிறது.  பெயர்ச்சி காலத்தில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வருமானம் உருவாகும். இது தவிர கூட்டுப் பணிகளில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவும் கிடைக்கும்.

மேலும் படிக்க | என்றென்றும் செல்வ செழிப்புடன் திகழ செய்ய வேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்..!! 

கும்பம்

சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். செல்வத்திற்குக் காரணமான சுக்கிரன் சஞ்சாரம் இந்த ராசியில்தான் நுழையப்போகிறார். பெயர்ச்சி காலத்தின் போது அதிர்ஷ்ட காற்று வீசும். பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கும்பத்தை ஆளும் கிரகம் சனி. சனி மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு உள்ளது.

மகரம்

சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஜோதிடத்தில், இரண்டாவது வீடு பணம் மற்றும் பேச்சு என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் திடீர் பண ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சம்பளம் கூடும். மகர ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்பு உணர்வு உண்டாகும். எனவே, பெயர்ச்சி காலத்தின் போது சிறப்பு பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News