என் மனைவி ஒரு ஆண்... 2-வார திருமண வாழ்விற்கு பின் கதறும் கணவன்!

யாரும் அனுபவிக்க விரும்பாத ஒரு வகையான அனுபவம் இது, ஆனால் புதிதாக திருமணமான இந்த உகாண்டா ஆணுக்கு தற்போது நிகழ்ந்துள்ளது!

Last Updated : Jan 17, 2020, 04:27 PM IST
என் மனைவி ஒரு ஆண்... 2-வார திருமண வாழ்விற்கு பின் கதறும் கணவன்! title=

யாரும் அனுபவிக்க விரும்பாத ஒரு வகையான அனுபவம் இது, ஆனால் புதிதாக திருமணமான இந்த உகாண்டா ஆணுக்கு தற்போது நிகழ்ந்துள்ளது!

துரதிர்ஷ்டம் நிறைந்த இந்த உகாண்டா ஆண் சமீபத்தில் திருமணம் முடித்தார், திருமணம் ஆகி இரண்டு வாரங்கள் கழித்தே தனது மனைவி ஒரு ஆண் என கண்டறிந்துள்ளார். ஆம், அவர் காதலித்து திருமணம் செய்திது ஒரு ஆண் என இரண்டு வாரங்கள் கழித்தே அறிந்துக்கொண்டார். தனது மனைவி உண்மையில் ஒரு ஆண் என்று தெரிந்ததும் அந்த நபர் ஆழ்ந்த அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

முகமது முத்தும்பாவும் அவரது 'மணமகளும்' இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பாரம்பரிய நிகா விழாவில் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உள்ளூர் தகவல்களின்படி, முத்தும்பா சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது ‘மனைவி’ செல்வி ஸ்வபுல்லா நபுகீராவுடன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் தனது உலகத்தை தலைகீழாக மாற்றிய அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

திருமணம் ஆன போது, மணமகள் தான் தனது மாதவிடாய் சுழற்சியில் இருப்பதாக 'கூறியதால்' இந்த ஜோடி முதல் இரவினை தள்ளி வைத்துள்ளது. இரண்டு வாரங்கள் கழித்தும் மணப்பெண் முதல் இரவு சடங்கிற்கு மறுப்பு தெரிவிக்க, என்னவென்று காரணத்தை ஆராய்ந்த மணமகன் திடீர் அதிர்ச்சியில் மூழ்கினார்.

உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "நான் திருமணம் செய்ய ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தேன், அந்த சமையத்தில் ஹிஜாப் அணிந்த ஒரு அழகான பெண்ணை நான் சந்த்தித்தேன். பின்னர் எனது காதலை தெரிவித்தேன், அவளும் அதை ஏற்றுக்கொண்டாள். திருமணமும் முடிந்தது, ஆனால் திருமண நிகழ்வின் போது தான் தனது மாதவிடாய் காலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதலிரவு நடக்காமல் தள்ளிப்போனது." 

"நான் பொறுமையாக இருந்தேன், அவள் சரியாகிவிடுவாள் என்று காத்திருந்தேன், ஆனால் என் வீட்டு அயலவர்கள் ஏதோ சரியாக இல்லை என்பதை முதலில் கவனித்தனர். என் வீட்டு தொலைக்காட்சி மற்றும் துணி மூட்டைகளுடன் என் வீட்டு எல்லை சுவரை என் அயலவர்கள் கண்டு எனக்கு தெரியப்படுத்தினர். பின்னர் தொடர்ந்த விசாரணையிலேயே அவள் ஒரு ஆண் என தெரிந்துக்கொண்டோம்." என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இளம்பெண், பல நாட்களாக தேடப்பட்டு வந்த திருடன் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக சோதனையின்போது, ​​சந்தேக நபருக்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் விசாரித்தபோது, ​​சந்தேக நபர் பணத்திற்காக இமாமை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டார்.

Trending News