பக்தர்கள் அதிருப்தி! திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து!

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2021, 07:40 AM IST
பக்தர்கள் அதிருப்தி! திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து! title=

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் இன்றுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் (Tirupati) கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது, முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம் என்னும் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் மொத்தம் 22,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்த டோக்கன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 7,000 தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.  தற்போது இலவச தரிசனத்திற்காக 15 ,000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ | கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா (Coronavirus) தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், இலவச தரிசனத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இலவச தரிசன டோக்கன்கள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.

திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) தெரிவித்துள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News