சேலத்தில் ஆக,.22 முதல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!!

சேலம் மாவட்டத்தில் ஆக.22 முதல் செப்,.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது!

Last Updated : Jun 25, 2018, 01:42 PM IST
சேலத்தில் ஆக,.22 முதல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!! title=

சேலம் மாவட்டத்தில் ஆக.22 முதல் செப்,.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது!

தற்போது உள்ளா சூழ்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்று பலரும் பட்ட படிப்புகளை படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டேதான் இருக்கின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் கல்வியானது எளிதாக கிடைத்து விடுகிறது. அனால், வேலை கிடைப்பது மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது. 

படித்த பலருக்கு இந்திய ராணுவத்தில் சேரும் ஆசை நீண்டநாளாக இருக்கும். அனால், பல சூழ்நிலைகளால் நாம் அதை தவிர்த்திருப்போம் மீண்டும் எப்போது அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள். உணகளுகான நேரம் வந்துவிட்டது. 

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு, http://www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் ஜூலை 8 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  

மேலும், சேலம், கோவை, மதுரை, நீலகிரி, நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Trending News