வெறும் ரூ.500 முதலீடு செய்து பல லட்சம் லாபம் கிடைக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்!

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் திருத்தும் செய்யப்படுகிறது, அதன்படி இந்த ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 19, 2022, 06:28 AM IST
  • அரசாங்கம் வழங்கும் சிறப்பான முதலீடு திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா.
  • பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் நிதி சிக்கலை சமாளிக்க உதவும் திட்டமாகும்.
  • அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது.
வெறும் ரூ.500 முதலீடு செய்து பல லட்சம் லாபம் கிடைக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்! title=

அரசாங்கம் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறது, அந்த திட்டங்கள் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் வழங்குவதால் பலரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  அரசாங்கம் வழங்கும் சிறப்பான முதலீடு திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா, இந்தத் திட்டம் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் எதிர்கால நிதி சிக்கலை சமாளிக்க உதவும் அருமையான திட்டமாகும்.  சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் திருத்தும் செய்யப்படுகிறது, அதன்படி இந்த ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

மற்ற சிறு சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் முதலீட்டாளருக்கு சிறந்த வருமானத்தை தருகிறது.  இந்த கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பாதுகாவலர் பெயரில் தொடங்கலாம், குழந்தைக்கு 18 வயது ஆனது கணக்கை குழந்தையின் பெயரில் நிர்வகித்துக் கொள்ளலாம்.  ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் கணக்கை திறக்கலாம்.  இந்த கணக்கை எந்தவொரு வங்கி அல்லது தபால் நிலையங்களிலும் திறந்து கொள்ளலாம் மற்றும் தேவைப்படும் வங்கி அல்லது தபால் நிலைய கிளைகளுக்கும் மாற்றி கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மொத்த முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும், இதில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.250 செலுத்தி கணக்கை திறக்கலாம், இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்துகொள்ளலாம்.  இந்த கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.  இது வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது.  இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யும்போது ஆண்டின் மொத்த டெபாசிட் ரூ.6,000 ஆக இருக்கும்.  இப்போது உங்கள் குழந்தைக்கு 1 வயதாக இருக்கும்போது இந்த கணக்கை திறந்தால், அந்த குழந்தையின் 22 வயதில் மொத்த டெபாசிட் தொகை ரூ. 90,000 ஆக இருக்கும், இதற்கு வட்டியாக ரூ. 1,64,606 கிடைக்கும், கணக்கின் முதிர்வு காலத்திற்கு பிறகு இந்த திட்டத்தில் நீங்கள் பெறும் மொத்த தொகை ரூ.2,54,606 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அறிமுகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News