விதிகளை மாற்றிய IRCTC.. ரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் கட்டாயம் படிக்கவும்

IRCTC சமீபத்தில் குழந்தைகளின் பயணங்களைப் பொறுத்து சில மாற்றங்களைச் செய்துள்ளது. அவை யாவும் உங்களுக்காக தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 13, 2023, 09:30 AM IST
  • 12 வயது குழந்தைகளுக்கான விதிகள் இவை
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயண வசதி கொடுக்கப்படும்.
விதிகளை மாற்றிய IRCTC.. ரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் கட்டாயம் படிக்கவும் title=

இந்திய ரயில்வே முக்கிய அப்டேட்: இந்திய ரயில்வேயில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரும் பயணிக்க எளிதான வழி ரயில்வே ஆகும். பல நேரங்களில் பெண்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கின்றனர். அதாவது, ரயில்வே என்பது 'எல்லா வயதினருக்கும் பொருந்தும்' இதன் மூலம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர். இத்தகைய  சூழ்நிலையில், ரயில்வே விதிகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ரயிலில் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் என்னென்ன விதிமுறைகள் இருக்கும் என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்:
இந்நிலையில் 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயில்வேயில் பயணம் செய்தால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இருப்பினும், மக்களின் கோரிக்கையின் பேரில், ஆகஸ்ட் 2022 இல் ரயில்வே விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் ஆனால் அவர்களுக்கு முன்பதிவு இருக்கை கிடைக்காது. அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தனி இருக்கையை முன்பதிவு செய்ய விருப்பம் இருக்கும். இதற்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கான ஜாக்பாட்.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த புதிய அப்டேட் வந்தாச்சி

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது:
PIB இணையதளத்தின்படி, "ரயில்வே அமைச்சகத்தின் 06.03.2020 தேதியிட்ட சுற்றறிக்கையின் படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயண வசதி கொடுக்கப்படும். இருப்பினும், தனி பெர்த் அல்லது இருக்கை (சேர் காரில்) வழங்கப்படாது. எனவே, தனி பெர்த் கோரப்படாவிட்டால், எந்த டிக்கெட்டையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், தன்னார்வ அடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெர்த்/சீட் வேண்டும் என்றால், இதற்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும்.

12 வயது குழந்தைகளுக்கான விதிகள் இவை:
அதே நேரத்தில், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட இருக்கை எடுக்கவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதியை நீங்கள் செலுத்த வேண்டும். குழந்தை தனது பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணம் செய்யலாம். ஆனால், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன்பதிவு செய்தால், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது முந்தைய விதி அல்ல என்றாலும். 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பதிவு பெட்டியில் தனி பெர்த் அல்லது இருக்கை தேவைப்பட்டால் அவர்களுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மார்ச் 31, 2016 அன்று ரயில்வே துறை அறிவித்தது. இந்த விதி 21 ஏப்ரல் 2016 முதல் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தனி பெர்த் அல்லது இருக்கையைத் தேர்ந்தெடுத்து முழு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். ரயில்வேயில் பயணம் செய்யும் மொத்த குழந்தைகளில் 70 சதவீதம் பேர் முழு கட்டணத்தையும் செலுத்தி பெர்த் புக்கிங் செய்ய அவர்களது பெற்றோர்கள் விரும்புவதாக இந்த RTI மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. ஆனா தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News