12 நிமிடங்களில் 17 கி.மீ... இந்தியாவின் அதிவேக ரயில் RapidX மிக விரைவில்.. !

RAPIDX Phase-II: ரேபிடெக்ஸின் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள், அதாவது துஹாய் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரையிலான பகுதி வேகமாக நடைபெற்று வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2023, 01:09 PM IST
  • துஹாய் மற்றும் மீரட் தெற்கு ரயில் நிலையத்துக்கு இடையேயான 25 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
  • NCRTC நிர்வாக இயக்குனர் வினய் குமார் சிங், மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்.
12 நிமிடங்களில் 17 கி.மீ... இந்தியாவின் அதிவேக ரயில் RapidX மிக விரைவில்.. ! title=

டெல்லி-NCR பகுதியில் நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS) நடைபாதை டெல்லி மற்றும் மீரட் இடையே கட்டப்பட்டு வருகிறது. சாஹிபாபாத் முதல் துஹாய் வரையிலான அதன் முதல் பிரிவு தயாராக உள்ளது.  RapidX ரயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ராபிட்எக்ஸ் ரயில் சாஹிபாபாத்தில் இருந்து துஹாய் டிப்போ வரையிலான 17 கிமீ தூரத்தை வெறும் 12 நிமிடங்களில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதையில் ரேபிட்எக்ஸ் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வழியில் இது நாட்டின் அதி வேக ரயில் ஆகும். விரைவில் RRTS இன் சாஹிபாபாத் - துஹாய் பகுதி பொதுமக்களுக்காக திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ரேபிடெக்ஸின் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள், அதாவது துஹாய் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரையிலான பகுதி வேகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இது வ்ராஇ மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை, என்சிஆர்டிசி நிர்வாக இயக்குனர் வினய் குமார் சிங், மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார். ரேபிட் X இன் முதல் கட்டத்தின் கீழ் சாஹிபாபாத் முதல் துஹாய் வரையிலான பணிகள் பல நாட்களுக்கு முன்பே நிறைவடைந்துள்ளன. இந்த பிரிவில் தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்தப் பகுதி எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். இதைத் தொடர்ந்து, துஹாய் மற்றும் மீரட் தெற்கு ரயில் நிலையத்துக்கு இடையேயான 25 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 

Rapid X ரயில் கட்டணம் 

ரேபிட் எக்ஸ் கட்டணத்தை தீர்மானிக்க, ஐஐஎம் அகமதாபாத் குழு ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கை தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்திடம் (NCRTC) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, அதன் குறைந்தபட்ச கட்டணம் ரூ 15 முதல் ரூ 20 வரை இருக்கலாம், அதிகபட்ச கட்டணம் ரூ 160 வரை வைத்திருக்கலாம். டிக்கெட்டுக்கான ரூட் ஸ்லாபையும் ஐஐஎம் குழு முடிவு செய்துள்ளது. குறுகிய பாதை 2 முதல் 5 கிமீ வரை இருக்கும், அதிகபட்ச ஸ்லாப் 60 கிமீ கூடுதலாக இருக்கும். டெல்லி மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ் Rapid X இயக்கப்படும். அதன் கீழ் கட்டணத்தை என்சிஆர்டிசி வாரியம் முடிவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

முதல் கட்டத்தின் நிலை 

Rapid X இன் முதல் கட்டம் அதாவது முன்னுரிமைப் பிரிவு தயாராக உள்ளது. தற்போது சோதனை நடந்து வருகிறது ஆனால் வணிக செயல்பாடு இன்னும் தொடங்கப்படவில்லை. அதன் அனைத்து நிலையங்களும் முழுமையாக தயாராக உள்ளன. மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வெளியேறும் மற்றும் நுழைவுப் புள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ​​காஜியாபாத் புதிய பேருந்து நிலையத்தில் டெல்லி மெட்ரோவுடனான இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டத்தில் எத்தனை நிலையங்கள்

ரேபிட் எக்ஸ் இரண்டாம் கட்டத்தில், துஹாய் முதல் மீரட் தெற்கு நகரம் வரையிலான பணிகள் நிறைவடைந்து வருகின்றன. 25 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் நான்கு நிலையங்கள் இருக்கும். இவை முராத்நகர், மோடிநகர் தெற்கு, மோடிநகர் வடக்கு மற்றும் மீரட் தெற்கு நிலையங்கள். இதன் முதல் கட்டம் சாஹிபாபாத் முதல் துஹாய் வரை. இந்த 17 கிமீ நீளத்தில் சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களும் தயாராக இருந்தால், அதன் மொத்த நீளம் 42 கிலோமீட்டராக இருக்கும்.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!

கட்டுமானப் பணி ஆய்வு செய்யப்பட்டது

இன்று, என்சிஆர்டிசி எம்டி வினய் குமார் சிங் ரயில் பாதையை டிராலி மூலம் ஆய்வு செய்தார். வேகமாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு மத்தியில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இறுதிப் பணிகள் மற்றும் முன் கட்டப்பட்ட கூரை அமைப்பு போன்றவற்றையும் அவர் ஆய்வு செய்தார். ஒப்பந்ததாரருக்கு தேவையான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.  சாஹிபாபாத் முதல் துஹாய் வரையிலான முன்னுரிமைப் பகுதிக்குப் பிறகுதான் இது கட்டப்படுகிறது. இதன்போது, ​​சிவில் கட்டுமானப் பணிகள், ரயில் பாதையின் மீது அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள், அதாவது ஓஹெச்இ நிறுவுதல் மற்றும் மின்சாரப் பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

நிறைவடைந்துள்ள பணிகள்

மூராத்நகர், மோடிநகர் தெற்கு, மோடிநகர் வடக்கு மற்றும் மீரட் தெற்கு ஸ்டேஷன்கள் தொகுப்பு 3-ன் கீழ் கட்டப்பட்டு வருவதாக என்சிஆர்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர். துஹாய் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரை 25 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அதாவது மேல் மற்றும் கீழ் கோடுகளை இணைத்து 50 கிலோமீட்டர் லைன் போடப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இழுவை பணி, தண்டவாளம் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டம்... உலக தரத்தில் ரயில் நிலையங்கள்... பயன்பெறும் தமிழக ரயில் நிலையங்கள் பட்டியல்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News