PUBG Game தடை செய்யப்பட்டது... வருத்தம் தெரிவிக்கும் PUBG நிறுவனம்!

இந்திய நகரங்களில் இந்த தடைக்கு பதிலளிக்கும் விதமாக PUBG மொபைல் விளையாட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Last Updated : Mar 18, 2019, 01:35 PM IST
PUBG Game தடை செய்யப்பட்டது... வருத்தம் தெரிவிக்கும் PUBG நிறுவனம்! title=

PUBG மொபைல் விளையாட்டு ஆனது உலகளவில் மிகவும் பிரபலம் பெற்ற ஸ்மார்ட்கேம் என்பதில் சந்தேகமில்லை. உலகளவில் பிரபலமான போதிலும் இந்தியாவில் அவ்வாறு இல்லை., குழந்தைகளின் ஆய்வுகள் மற்றும் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை பாதிக்கும் வகையில் பாதிக்கும் இந்த விளையாட்டிற்கு இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் கருப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் குஜராத்தின் பெரும்பான்மை நகரங்களில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

PUBG மொபைல் விளையாட்டு முதலில் ராஜ் கோட்டையில் தடை செய்யப்பட்டது. மேலும் தடையினை மீறி PUBG விளையாட்டை விளையாடியாதாக அந்நகரத்தில் 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து அகமதாபாத் மற்றும் ஹிம்தன்நகர் பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சமீப்பத்திய நிகழ்வாக அகமதாபாத் நகரில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து PUBG விளையாட்டு தடை செய்யவேண்டும் என அகமதாபாத் காவல் ஆணையர் கடந்த மார்ச் 14-ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதேப்போல் குழந்தைகளின் மனநலம், நடத்தை ஆகியவற்றை PUBG விளையாட்டு பாதிப்பதாக அருகாமை நகர்களிலும் அறிவிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்திய நகரங்களில் இந்த தடைக்கு பதிலளிக்கும் விதமாக PUBG மொபைல் விளையாட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் PUBG குறிப்பிட்டுள்ளதாவது... "PUBG மொபைல் என்பது ஒரு விளையாட்டு. இது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, ஒரு ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான முறையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு விளையாட்டு. பொறுப்பான கேமிங் அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு எங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதில், இந்தியாவில் ஆரோக்கியமான விளையாட்டு முறைமை அறிமுகப்படுத்தப்படுவதோடு, குறைந்த வயதுடைய வீரர்களுக்கான நாடக நேரத்தை கட்டுப்படுத்துவது உட்பட, சமநிலையான, பொறுப்பான கேமிங்கை ஊக்குவிக்கிறோம். சில நகரங்களில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் எங்கள் விளையாட்டை தடை செய்வதாக முடிவு எடுத்துள்ளது ஆச்சரியமாக இருந்தது. 

இத்தகைய தடைகளை சட்டபூர்வமான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள நாங்கள் வேலை செய்கிறோம், மேலும் எங்கள் நோக்கங்களை விளக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலைப் பெற முடியும் என்று நம்புகிறோம். PUBG மொபைல் பயனர்களுக்கு., நாங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், ஒரு நியாயமான தீர்வு காண எங்கள் சிறந்த முயற்சி எடுப்போம் " என குறிப்பிட்டுள்ளது.

Trending News