உலகில் அதிக வருமானம் ஈட்டும் Google CEO சுந்தர் பிச்சை.. அவருடைய மாத சம்பளம் என்ன?

சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் ஒருவர். இந்த ஆண்டு அவரது சம்பளம் 2 மில்லியன் டாலர்களாக (ரூ. 15.26 கோடி) அதிகரிக்கும் என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2020, 11:09 PM IST
உலகில் அதிக வருமானம் ஈட்டும் Google CEO சுந்தர் பிச்சை.. அவருடைய மாத சம்பளம் என்ன? title=

தகவல்: சுந்தர் பிச்சை (Sundar Pichai) உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மொத்த சம்பளமாக 2019 ஆம் ஆண்டில்  281 மில்லியன் டாலர் அல்லது 2,144.53 கோடி ரூபாய் பெற்றார்.

ஆல்பாபெட் இன்க் (Alphabet CEO Sundar Pichai) ஒழுங்குமுறை அமைப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2019 ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட சம்பளம் 28 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.

மார்க்கெட்வாட்சின் ஒரு அறிக்கையின்படி, அந்த நேரத்தில், சுந்தரம் பிச்சை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது சம்பளம் கிட்டத்தட்ட 200 மில்லியனை எட்டியது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 281 மில்லியன் டாலர் அல்லது 2,144.53 கோடி ரூபாய் பெற்றார்.

சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் ஒருவர். இந்த ஆண்டு அவரது சம்பளம் 2 மில்லியன் டாலர்களாக (ரூ. 15.26 கோடி) அதிகரிக்கும் என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது. சுந்தர் பிச்சையின் சம்பளம் ஆல்பாபெட் ஊழியர்களின் சராசரி சம்பளத்தின் 1085 மடங்கு ஆகும்.

அவரது அடிப்படை சம்பள உயர்வுக்கு கூடுதலாக, பிச்சைக்கு இரண்டு பங்கு தொகுப்புகள் வழங்கப்பட்டன. எஸ் & பி 100 உடன் ஒப்பிடும்போது ஆல்பாபெட்டின் பங்குகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இவற்றில் சில செலுத்தப்படும்.

சுந்தர் பிச்சை யார்?

சுந்தர் பிச்சை ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் எல்.எல்.சியின் தலைமை நிர்வாக அதிகாரி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். கூகுள் தனது நிறுவனத்தின் பெயரை ஆல்பாபெட் என்று மாற்றியுள்ளது. சுந்தர் பிச்சை 2015 இல் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியானார். டிசம்பர், 2019 இல், அவர் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

சுந்தர் பிச்சாய் தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத் பிச்சாய் பிரிட்டிஷ் குழுவின் ஜி.இ.சி.யில் மின் பொறியாளராக இருந்தார். சுந்தர் பிச்சை கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) பொறியியல் பட்டம் பெற்றார்.

Trending News