PPF, SSY, NSC திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

Government Saving Schemes: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.90 சதவீதம் உயர்த்திய பிறகு, பல வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2022, 03:42 PM IST
  • ஜூலை 1 முதல், அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.
  • செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி 7.6 சதவீதமாக உள்ளது.
PPF, SSY, NSC திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வட்டி விகிதம் அதிகரிக்கலாம் title=

அரசாங்க சேமிப்புத் திட்டங்கள்: நீங்கள் என்எஸ்சி, பிபிஎஃப் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டமான எஸ்எஸ்ஒய் போன்ற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்தத் திட்டங்கள் ஜூலை 1, 2022 முதல் அபரிமிதமான வருமானத்தைப் பெறவுள்ளன. ஜூலை 1 முதல், மத்திய அரசு அதன் பிபிஎஃப் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தக்கூடும். 

ஒவ்வொரு காலாண்டு தொடங்கும் முன்னரும், நிதி அமைச்சகம் அரசு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1, 2022 முதல், அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதமாக உயர்த்தி நிதி அமைச்சகம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.90 சதவீதம் உயர்த்திய பிறகு, பல வங்கிகள் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1 முதல், இந்த அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) 7.1 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. என்எஸ்சி-இல் 6.8 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பம்பர் ஏற்றம் 

தற்போது செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 7.6 சதவீதமும், மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீதமும் வட்டி கிடைக்கிறது. இது தவிர, கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டங்களுக்கான வட்டியை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

ஏப்ரல் 2020 முதல் எந்த மாற்றமும் இல்லை

குறிப்பிடத்தக்க வகையில், 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக, நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பில், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022 வரை இருக்கும் நான்காவது காலாண்டின் ( ஜனவரி) தற்போதைய கட்டணங்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | PPF: மத்திய அரசு மேற்கொண்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News