Entertainment News: அமிதாப் பச்சனின் எதிரி யார்? திடுக்கிடச்செய்யும் Big Bயின் பதிவு

'எதிரிகளை உருவாக்க போராட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் கொஞ்சம் வெற்றி பெற்றால், சுலபமாக உருவாகிவிடுவார்கள்' என்ற அமிதாப் பச்சனின் டிவிட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 27, 2020, 06:50 PM IST
  • முத்தத்தால் சிவக்கும் அமிதாப்பின் பொன்மொழிகள் இதோ...
  • எதிரிகளை உருவாக்கத் தேவையில்லை, வெற்றி பெற்றால் தானாகவே உருவாகிவிடுவார்கள்
  • சவால்கள் தவிர்க்கமுடியதவை, ஆனால் வெற்றியும் தோல்வியும் நம் கையில் தான் உள்ளது
  • வெறிச்சோடிக் கிடக்கும் இந்த வீட்டில் இன்னும் சில நாட்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும்
Entertainment News: அமிதாப் பச்சனின் எதிரி யார்? திடுக்கிடச்செய்யும்  Big Bயின் பதிவு title=

புதுடெல்லி: "दुश्मन बनाने के लिए ज़रूरी नही लड़ा जाए, आप थोड़े कामयाब हो जाओ तो वो ख़ैरात में मिलेंगें" என்ற அமிதாப் பச்சனின் டிவிட்டர் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  தற்போது மும்பை நானாவதி மருத்துவமனையில் அமிதாப் பச்சன் கொரோனா  சிகிச்சை பெற்று வருகிறார். அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்தனை செய்கின்றனர். 

கொரோனா பாதிப்பு இருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் தொடர்ந்து பல பதிவுகளை பகிர்ந்துகொள்கிறார்.

'எதிரிகளை உருவாக்க போராட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் கொஞ்சம் வெற்றி பெற்றால், சுலபமாக எதிரிகள் உருவாகிவிடுவார்கள்' என்ற பொருள்படும் "दुश्मन बनाने के लिए ज़रूरी नही लड़ा जाए, आप थोड़े कामयाब हो जाओ तो वो ख़ैरात में मिलेंगें" என்ற அமிதாப் பச்சனின் டிவிட்டர் பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவருக்கு எதிரிகள் யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அமிதாப்  பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அவரது முகத்தில் முத்தம் கொடுத்த முத்திரைத் தடங்கள் தெரிகின்றன. லிப்ஸ்டிக் தடங்களால்  Big Bயின் முகம் சிரிப்பால் மலர்ந்திருக்கிறது. ஒருபக்கம் அதிர்ச்சி கொடுத்தால், மறுபுறம் முத்த முகத்தைக் காட்டி ஆனந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அமிதாப் பச்சன

இதைத் தவிர, அமிதாப் பச்சன் எழுதிய மற்றொரு பதிவும் பரவலாக பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. "வாழ்க்கையில் சவால்கள் தவிர்க்க முடியாதவை, ஆனால், வெற்றி தோல்வி என்பது நம் கையில் தான் உள்ளது" என்ற பொருள்படும், "Being challenged in life is inevitable, being defeated is optional" என்று அமிதாப் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சனின் இந்த பதிவுகளை பலரும் like செய்து, share செய்கின்ற்னர். வைரலாகும் அமிதாப்பின் இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளை அவரது ரசிகர்கள் விரும்பி படிக்கின்றனர்.  விரைவில் உடல்நலம் பெற்று வாருங்கள் என்று Big Bக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.    

Read Also | வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையும் அவரே சமூக ஊடகங்களில் பதிவிட்டார். 'பிக் பி' க்குப் பிறகு, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதிகளில் மகளும், அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆராத்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

அதையடுத்து அமிதாப் பச்சனின் பங்களா சீல் வைக்கப்பட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு, அமிதாப் தனது வீட்டின் புகைப்படத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அமிதாப்பின் வீட்டின் பெயர் ஜல்சா. "ஜல்சா தற்போது  வெறிச்சோடிக் கிடக்கிறது, ஆனால் விரைவில் இங்கே மகிழ்ச்சி திரும்பிவிடும்" என்று நம்பிக்கையுடன் அமிதாப் வெளியிட்ட பதிவு அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.  

கொரோனா பாதிப்பு தொடர்ந்து நாட்டில் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.  

Trending News