7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அடுத்த மாதம் அறிவிப்பு, பம்பர் ஊதிய உயர்வு

7th Pay Commission: விரைவில் அகவிலைப்படியுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 12:15 PM IST
  • நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு?
  • ஃபிட்மெண்ட் பேக்டர் பற்றிய நல்ல செய்தி.
  • எப்போது அறிவிப்பு?
7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அடுத்த மாதம் அறிவிப்பு, பம்பர் ஊதிய உயர்வு title=

7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நாட்டில் உள்ள மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நல்ல செய்திகள் வரவுள்ளன. விரைவில் அகவிலைப்படியுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இதற்கான பணிகளும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இரட்டை குட் நியூஸ்

மத்திய அரசு விரைவில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரிக்கவுள்ளது. இதனுடன் ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மோடி அரசு இப்போது விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், இந்த இரட்டை அதிகரிப்புகள் நடந்தால், அது அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசாக கருதப்படும். 

அகவிலைப்படி அதிகரிப்பு

அரசாங்கம் அகவிலைப்படியை (DA Hike) 3 அல்லது 4 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்திய தரவுகளின் படி, ஏஐசிபிஐ 4 சதவிகிதம் அதிகரிக்கும் என நம்பப்பட்டது. ஆனால், தற்போது 3% அதிகரிப்புதான் இருக்கும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய உண்மையான விவரம் புலப்படும். 

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 42 சதவிகித அகவிலைபப்டியை பெறுகிறார்கள். ஓய்வூதியம் பெறுவோர் தங்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 42 சதவிகித அகவிலை நிவாரணத்தை பெறுகிறார்கள். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தாலும் அது சார்ந்த உயர்வு மாத ஊதியத்தில் இருக்கும்.

ஃபிட்மென்ட் பேக்டர் 

இது தவிர, ஃபிட்மென்ட் பேக்டர் விகிதங்களையும் அரசு அதிகரிக்கக்கூடும். ஃபிட்மெண்ட் பேக்டரை அரசு உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபிட்மெண்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டால், அதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். 

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: LTC விதிகளில் மாற்றம்... இனி அதிக நன்மைகள் கிடைக்கும்

எப்போது அறிவிப்பு?

அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கும் தேதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நான்கு சதவீதம் டிஏ அதிகரிக்க வாய்ப்பு?

ஏஐசிபிஐ குறியீட்டின் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், இம்முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெருமளவில் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த முறையும் டிஏ மற்றும் டிஆர் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும்.

அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஏறக்குறைய 1 கோடி குடும்பங்கள் இதனால் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழு (7th Pay Commission) விதிகளின்படி, அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து பொருந்தும். இப்போது டிஏ அதிகரிப்பு அறிவிக்கப்பட்டால், அதன் விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

ஃபிட்மெண்ட் பேக்டர் பற்றிய நல்ல செய்தி

மத்திய ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் பேக்டர் உயர்வை மோடி அரசு விரைவில் பரிசாக வழங்கப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஃபிட்மெண்ட் பேக்டரை 2.60 மடங்கில் இருந்து 3 மடங்காக அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அப்படி நடந்தால் அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்.. டிஏ அரியர் பற்றிய மாஸ் அப்டேட்!! குஷியில் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News