மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியுமா?..

ஒருவர் மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்பது ஒரு ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் ஜெர்மன் மருத்துவர்கள். 

Last Updated : Feb 17, 2018, 03:48 PM IST
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியுமா?.. title=

ஒரு மனித இறந்தவுடன் அவன் இந்த உலகத்தை பிரிந்துவிட்டார் என்று நாம் அனைவரும் நினைக்குறோம். ஆனால், இறந்தவர்களுக்கும் மறு வாழ்க்கை இருக்கின்றது என்பது பற்றி உணகளுக்கு தெரியுமா?. 

நாம் அனைவரும் ஒரு உயிருள்ள ஜீவனுக்கு மரணம்தான் இறுதியானது என நினைப்போம். ஒருவருக்கு மறுபிறவி என்து சொர்க்கம் மற்றும் நரகம் என்பது இல்லை. நம் மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே நமது நினைவில் இருக்கும். 

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணத்தைப்பற்றி கூறுவது, மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று தெரிவித்துள்ளார். 

ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என்பதை நிரூபித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2012 மற்றும் 2016-க்கு இடையில் கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

 
எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

இதையடுத்து, 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது.  இதற்குள், அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது.  டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

இந்த பரிசோதனைக்கு நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல் மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆட்டோ பல்ஸ் என்று கூறுகின்றனர். 

இதில் உடலில் இருந்து உயிர் பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. 

எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடையச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மதநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என இந்த ஆய்வுக் குழு மருத்துவர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகிறார். 

Trending News