பெற்றோர்களே உஷார்..! குழந்தைகளுக்கு ‘இந்த’ 5 உணவுகளை கண்டிப்பாக தரக்கூடாது..!

வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத சில உணவுகள் இருக்கின்றன, இதனால் பல பாதிப்புகள் உண்டாகலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 25, 2023, 02:00 PM IST
  • குழந்தைகளுக்கு செரிமானத்தை தரும் உடல் உறுப்புகள் வளர்ச்சியடையாமல் இருக்கும்.
  • இதனால் அவர்களுக்கு பல சமயங்களில் உடல் உபாதைகள் ஏற்படும்.
  • குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத சில உணவுகள் எனென்னன தெரியுமா..?
பெற்றோர்களே உஷார்..! குழந்தைகளுக்கு ‘இந்த’ 5 உணவுகளை கண்டிப்பாக தரக்கூடாது..! title=

வளர்ந்தவர்கள் உட்கொள்ளும் உணவு முறைக்கும் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் உணவுகளுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் இருக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு பற்கள் சரியாக முளைத்து இருக்காது. இந்த சமயங்களில் பெற்றோர்கள், குழந்தைகளால் கடிக்க முடியாத உணவுகளை கொடுத்தால் அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து. அது மட்டுமன்றி, வளரும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டுமோ அதை மட்டும்தான் கொடுக்க வேண்டும்.

பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு மூச்சுத்திணறல், வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் ஆகியவை ஏற்படும். இதனால் சில குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சில உணவுகளை கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா? 

1.திராட்சை:

இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும் திராட்சை பழத்தை பெரியவர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. ஆனால், அந்த பழத்தில் உள்ள கொட்டைகள் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் தொண்டை குழி மிகவும் சிரியதாகவே இருக்கும். அவர்களால் மென்று சாப்பிட முடியாது என்பதால், கொடுக்கும் உணவுகளை அப்படியே தொண்டை குழிக்குள் இறக்குவார்கள். திராட்சை பழத்தை கொடுக்கையிலும் இதே நிலைதான் ஏற்படும். அந்த பழத்தில் உள்ள கொட்டைகளால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். அதனால் வளரும் குழந்தைகளுக்கு திராட்சை பழத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!

2.காரமான உணவுகள்:

சிலர், தங்களது குழந்தைகளுக்கு காரமான உணவுகளை கொடுப்பதுண்டு. குழந்தைகள் வளர்கையில் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகவே மசாலா சுவையை காண்பிக்க வேண்டும். ஆனால், ஒரே அடியாக குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் காரம் சேர்ப்பது அவர்களை வயிற்று பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். மேலும், காரமான உணவுகள் அவர்களுக்கு நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுகள் ஆகியவற்றையும் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். 

3.பச்சை காய்கறிகள்:

பச்சையாக, முழுமையாக வேகாத காய்கறிகளை குழந்தைகளுக்கு தரவே கூடாது என மருத்துவர்கள் ஸ்ட்ரிக்டாக கண்டீஷன் போடுகின்றனர். சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கேரட் போன்ற பச்சை காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி தருவர். இதுவும் ஆபத்துதான். அப்படி காய்கறியை தர வேண்டும் என்றால் அதை நன்கு வேக வைத்து தர வேண்டும் என்கின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு அது எளிதில் ஜீரணமாகும். காய்கறிகளை ஜூஸ் ஆகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

4.மிட்டாய்கள்:

குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவர். மிட்டாய்கள் கேட்டு அழுதால் சில பெற்றோர்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குவதுண்டு. கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிட்டாய்களை கொடுத்து பழக்கிவிட கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக சுவிங்கம் போன்றவற்றை கொடுக்கவே கூடாதாம். மேலும், மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளை கொடுப்பதால் பிற்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படலாம். 

5.குளிர்பானங்கள்:

டின்கள் அல்லது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கேஸ் நிறைந்த குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.அந்த பானங்களில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.இது, பற்கள் வளரும் இடங்களில் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பல் வளர்ந்த குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படும். எனவே இது போன்ற குளிர் பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

திடமான உணவுகளை ஏன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது..? 

நமது உடலும் உறுப்புகளும் நாம் வளர வளரதான் வளர்ச்சி பெரும். பிறந்த குழந்தையின் குடல், திட உணவுகளை செரிமானம் செய்யும் அளவிற்கு சில ஆண்டுகளுக்கு வளர்ச்சி பெறாது. இதனால்தான் திட உணவுகளான பழங்கள், அரிசி சாதம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு கொடுக்கும் படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கேற்ற வயது வந்த பிறகு கூட கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களுக்கு திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அந்த உணவுகள் செரிமான கோளாரை ஏற்படுத்தவில்லை என்றால்தான், அந்த உணவுகளை அவர்களுக்கு நன்கு பழக்கி விட வேண்டும். 

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News