தமிழ்நாடு அரசில் கணினி மேலாளர் பணி - முழு விவரம்

தமிழ்நாடு அரசில் கணினி மேலாளர் பணி தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 11, 2022, 01:28 PM IST
  • கணினி மேலாளர் வேலை வாய்ப்பு
  • மூன்று பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன
  • நவம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசில் கணினி மேலாளர் பணி - முழு விவரம் title=

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வு சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்புற சுகாதார மேலாளர்‌ & கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ தற்காலிகமாக பணி நியமனம்‌ செய்யப்படும்.

காலிப்பணியிடங்கள்:

Sector Health Nurse/ Urban Health Manager – 2 பணியிடங்கள்

System Manager/ Data Manager – 1 பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BPT, BPO, BOT, B.Sc, M.Sc, MBA, Post Graduation Degree/ Diploma, Master in Disability Rehabilitation Administration முடித்திருக்க வேண்டும்.

Sector Health Nurse/ Urban Health Manager – B.Sc/ M.Sc in Nursing

System Manager/ Data Manager – BPT, BPO, BOT, B.Sc Nursing, Master in Disability Rehabilitation Administration, Post Graduation Diploma in Hospital/ Health Management, MBA முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்புற சுகாதார மேலாளர்‌ – ரூ. 25,000

கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ – ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர்‌, மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌, காஞ்சிபுரம்‌ அலுவலகத்தில்‌ நேரில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ அல்லது https://kancheepuram.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன்‌ பணிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின்‌ நகல்களை சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பங்கள்‌. நேரிலோ அல்லது விரைவு தபால்‌ (Speed Post) மூலமாகவே நவம்பர் 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News