மகிழ்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!

DA Hike: தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி, ஹிமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2023, 04:54 PM IST
  • மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை உயர்த்தியது.
  • ராஜஸ்தான், அஸ்ஸாம் மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு! title=

DA Hike: மத்திய அரசு அதன் அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியக்காரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி, கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. தொடர்ந்து, ராஜஸ்தான், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், ஹிமாச்சல் பிரதேச அரசும் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. 

முதல்வர் சுக்விந்தர் சுகு தலைமையிலான இமாச்சல பிரதேச அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாநிலம் உருவாக்கப்பட்ட ஹிமாச்சல் தினத்தையொட்டி, முதல்வர் சுகுவால் நேற்று (ஏப். 15) இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் 2.15 லட்சம் ஊழியர்கள் மற்றும் 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அகவிலைப்படி அதிகரிப்பால், அரசின் கருவூலத்தில் சுமார் 500 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் வசிக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், கல்லூரியைத் திறப்பதாகவும், காசா நகரில் 50 படுக்கைகள் கொண்ட சமூக சுகாதார மையத்தை செயல்பட வைப்பதாகவும் அறிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission அட்டகாசமான செய்தி: மீண்டும் ஒரு டிஏ ஹைக், மீண்டும் ஊதிய உயர்வு

இந்தாண்டு, ஜனவரி 1 முதல் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கடந்த மாதம் 4% முதல் 42% வரை மத்திய அரசு உயர்த்தியது. அதிக பணவீக்கம் மற்றும் உணவு மற்றும் எரிபொருளின் விலை உயர்வுக்கு மத்தியில் அவர்கள் அகவிலைப்படியை அதிகரிக்க நீண்ட காலமாக கோரி வந்தனர். 

4 சதவீத அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. அரசின் அறிவிப்பின்படி, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2023 முதல் 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். முன்னதாக, அவர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. ராஜஸ்தான், அஸ்ஸாம் மாநிலங்களும் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்திய நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் 3 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | இனி இலவசமாக மளிகை பொருள்கள்... அரசின் சிறப்பான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News