7th Pay Commission அதிர்ச்சி செய்தி: டிஏ அதிகரிப்பில் தடை வரக்கூடும், காரணம் இதுதான்

7th Pay Commission: ஜூலையில் டிஏ உயர்த்தப்படும் என ஊழியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு முன்பே மத்திய ஊழியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2022, 05:18 PM IST
  • மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி.
  • டிஏ உயர்வில் பிரேக் இருக்கலாம்.
  • ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு வெளிவந்தது.
7th Pay Commission அதிர்ச்சி செய்தி: டிஏ அதிகரிப்பில் தடை வரக்கூடும், காரணம் இதுதான் title=

7வது ஊதியக்குழு: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் 3% அகவிலைப்படியை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் தொகையும் மார்ச் மாத சம்பளத்தில் வரவு வைக்கப்பட்டது. 

இதனுடன், 2022 ஜனவரி-பிப்ரவரிக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து, தற்போது அடுத்ததாக ஜூலையில் டிஏ உயர்த்தப்படும் என ஊழியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு முன்பே மத்திய ஊழியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது.

ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரையும் இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையும் செய்யப்படுகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் செய்யப்பட்டுள்ளது. 

இப்போது ஜூலையில் மீண்டும் ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படும். இதற்கிடையில், அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. தற்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மட்டுமே வந்துள்ளது. டிசம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது இதில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மற்றொரு குட் நியூஸ், டிஏ-வுக்கு பிறகு மீண்டும் ஒரு அதிகரிப்பு 

ஏஐசிபிஐ எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது?

டிசம்பர் 2021 இல், ஏஐசிபிஐ எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. அதே நேரத்தில், ஜனவரி 2022 இல், இது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக குறைந்தது. இதற்குப் பிறகு பிப்ரவரியிலும் 0.1 புள்ளிகள் குறைந்துள்ளது. 

இரண்டு மாதங்களிலும் புள்ளிவிபரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு இருக்காது என்று அஞ்சப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 124.7 க்கு கீழே சென்றால், அகவிலைப்படியில் அதிகரிப்பு இருக்காது. அதே சமயம், 124க்கு கீழே சென்றாலும் டிஏவை மாற்றாமல் வைத்திருக்க முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, அகவிலைப்படி குறைக்கப்படாது. 

இருப்பினும், அகவிலைப்படி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் முடிவடையவில்லை. ஏனென்றால் மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ எண்கள் இன்னும் வரவில்லை. இந்த காலகட்டத்தில் ஏஐசிபிஐ குறியீடு மேல்நோக்கி நகர்ந்தால், கண்டிப்பாக அகவிலைப்படியில் அதிகரிப்பு இருக்கும்.

ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) புள்ளிவிவரங்கள், நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் அமைந்துள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஏஐசிபிஐ-ன் இந்தத் தரவு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்ந்த பிறகு ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News