7th Pay Commission: டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? முக்கிய அப்டேட்

DA Arrear Update: இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டிஏ அரியர் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 06:18 PM IST
  • ஊழியர்களுக்கு கிடைக்குமா டிஏ அரியர்?
  • இந்த காலாண்டில் முடிவு எடுக்கப்படலாம்.
  • அரசு சார்பில் என்ன கூறப்படுகின்றது?
7th Pay Commission: டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? முக்கிய அப்டேட் title=

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. 3% அகவிலைப்படிக்குப் பிறகு, 18 மாத அரியர் குறித்தும் அரசாங்கம் தற்போது முடிவெடுக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என அரசு முன்பு கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முடிவு எடுக்கப்பட்டால், ஊழியர்கள் சுமார் 2.18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

டிஏ அரியர் குறித்த முடிவு விரைவில் வரக்கூடும்

கொரோனா தொற்றால் முடக்கப்பட்டிருந்த 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்த பரிசீலனை, தற்போதைக்கு நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை, ஆனால் இப்போது இது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான நிலுவைத் தொகையை செலுத்தும் முடிவை தற்போது அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வைத் தொடர்ந்து பிற கொடுப்பனவுகளிலும் உயர்வு, ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 

நிதியமைச்சர் கூறியது என்ன? 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா தொற்றுநோய் காரணமாக, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. முடக்கப்பட்ட அகவிலைப்படி தொகை கொண்டு ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசாங்கம் உதவியது. தொற்றுநோய்களின் போது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. இதனுடன், மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படவில்லை, டிஏ குறைக்கப்படவில்லை. ஆண்டு முழுதும் அகவிலைப்படி மற்றும் சம்பளம் வழங்கப்பட்டது.’ என்று தெரிவிக்கப்பட்டது. 

அகவிலைப்படி அரியர் தொகை: எவ்வளவு கிடைக்கும்? 

- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.

- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள். 

- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சதவீதம்}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.

- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.

- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.

- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.

மேலும் படைக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News