7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக அதிகரிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 10:36 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.
  • அகவிலைப்படியில் 4% உயர்வு சாத்தியம்.
  • ஊதிய உயர்வின் முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம் title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக அதிகரிக்கும். இந்த உயர்வின் பலனை ஊழியர்கள் பம்பர் சம்பள உயர்வாகக் காண்பார்கள். ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் விரிவாக காணலாம். 

மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி 
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஜூலை மாதத்தில் அதிகரிக்கப்படலாம். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என்று மார்ச் மாதம் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) மூலம் தெளிவாகியுள்ளது. .

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022க்கான ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கை ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் இந்த குறியீடு 125 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அது 1 புள்ளி அதிகரித்து 126 ஆக உள்ளது. ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கக்கூடும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பா? 

மத்திய அரசு கடைசியாக 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது. அப்போது, ​​அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஏ மற்றும் டிஆர் உயர்வு மீதான முடக்கத்தை நீக்கியது. அதன் பின்னர், ஊழியர்களின் அகவிலைப்படி பல சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
அரசு 4% அகவிலைப்படியை உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 38% ஆக உயரும். இப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பதை இங்கே காணலாம்.

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640

மேலும் படிக்க | 7th Pay Commission:அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பெரிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News