அதிர்ச்சி! உணவு தட்டுக்கு சண்டை போட்டு கொண்டதில் 1 பலி!

உத்தர பிரதேச மாநில திந்தூரி மாவட்டத்தில் உள்ள விக்ரம்பூர் பகுதியில் நேற்று திருமண விழாவில் பங்கேற்க உறவினர்கள் சனிக்கிழமை இரவு வந்தனர். அப்போது விழாவில் விருந்தில் உணவு பரிமாற தட்டுக்கள் பற்றாக்குறையால் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

Last Updated : Jun 25, 2018, 09:44 AM IST
அதிர்ச்சி! உணவு தட்டுக்கு சண்டை போட்டு கொண்டதில் 1 பலி! title=

உத்தர பிரதேச மாநில திந்தூரி மாவட்டத்தில் உள்ள விக்ரம்பூர் பகுதியில் நேற்று திருமண விழாவில் பங்கேற்க உறவினர்கள் சனிக்கிழமை இரவு வந்தனர். அப்போது விழாவில் விருந்தில் உணவு பரிமாற தட்டுக்கள் பற்றாக்குறையால் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாற சிலரை ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த வகையில் விருந்தினர்களுக்கு தின்பண்டங்கள் மற்றும் சில உணவுகள் தட்டுகளில் வைத்து வழங்கப்பட்டது. இதில் உணவை வழங்குவதற்கான தட்டு பற்றக்குறை ஏற்பட்டதில் சிலருக்கு உணவு வழங்க முடியவில்லை. 

தட்டு பற்றக்குறை ஏற்பட்டதில் சிலர் உணவு வழங்கி வந்த நபர்களிடம் கேட்டனர். இந்த சம்பவம் வாய் சண்டையில் தொடங்கி, அடிதடியில் முடிந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 20வயதான இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளார். 

Trending News