கர்நாடகா தேர்தல் 2018: தொடங்கியது வாக்குபதிவு!! அனைவரும் ஓட்டு போடுங்க!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2018, 07:02 AM IST
கர்நாடகா தேர்தல் 2018: தொடங்கியது வாக்குபதிவு!! அனைவரும் ஓட்டு போடுங்க!! title=

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்க மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுவதால், கர்நாடக தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இன்று வாக்கு பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில எல்லை பகுதிகளில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடி ஆகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இந்த தேர்தலை ஒட்டி மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். செல்போன் ஆப் மூலம் எந்த வாக்குசாவடியில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதை அறியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. 

மீதமுள்ள இரண்டு தொகுதிக்கும் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதாலும், ஆர்.ஆர். நகர் தொகுதியில் பத்தாயிரம் வாக்களர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

222 தொகுதிகளுக்கான கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடங்கியது. மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். வரும் 15 ஆம் தேதி தெரிந்துவிடும் கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுகிறார்கள் என்று, 

Trending News